டெல்லி: இந்திய மக்கள் அனைவரும் சாதாரண விளக்குகளை விடுத்து எல்இடி விளக்குகளை பயன்படுத்தினால் வருடத்திற்கு 7 பில்லியன் டாலர் (43,750 கோடி ரூபாய்) பணத்தை சேமிக்க முடியும் என மின்சார துறை அமைச்சரான பியூஷ் கோயல் கூறுகிறார்.
மின்சாரம் உற்பத்தி எந்த அளவிற்கு ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமோ அதற்கு இணையாக மின்சாரத்தை சேமிக்கும் திட்டங்களும் அதி முக்கியமானவை என டெல்லியில் உர்ஜா சங்கம் நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

ஆண்டுக்கு 100 பில்லியன் யூனிட் மின்சாரத்தைச் சேமிக்க திட்டத்தில், மக்கள் அனைவரும் எல்ஈடி விளக்குகளை பயன்படுத்த வேண்டுகிறோம். இதன் மூலம் அரசின் 7 பில்லியன் டாலர் நிதியைச் சேமிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பியூஷ் கோயல் மின்சார துறை மட்டும் அல்லாமல் நிலக்கரி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் தலைவராகவும் உள்ளார்.
எல்ஈடி விளக்கு அடுத்த 10 ஆண்டுகளில் ஒளிர்வு விளக்குகள் (incandescent bulbs) பயன்பாட்டை முற்றிலுமாக குறைத்து விடும் என்றார் கோயல்.


Click it and Unblock the Notifications