டெல்லி: இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் இத்தருணத்தில், சந்தையில் குதிக்க 6 நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாக சந்தை கட்டுப்பாட்டு ஆணையாமான செபி தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் இறங்குவதன் மூலம் இந்த 6 நிறுவனங்களும் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான நிதியைத் திரட்டும் திட்டத்துடன் உள்ளது. செபி-யின் ஆய்வுக்கு பின் இந்நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்.
6 நிறுவனங்கள்
ஏஜிஎஸ் டிரான்சாக்ட் டெக்னாலஜிஸ், எஸ்.ஹெச் கெல்கர் அண்ட் கம்பனி, ஸ்ரீ சுபம் லாஜிஸ்டிக்ஸ், ஃப்ரிசிஷன் கேம்ஷாப்ட்ஸ், பென்னார் இன்ஜினியர்ட் பில்டிங் சிஸ்டம்ஸ் மற்றும் எஸ்எஸ்ஐபிஎல் ரிடைல் ஆகிய 6 நிறுவனங்கள் பங்குசந்தையில் இறங்குவதற்காக செபியிடம் முழுமையான விண்ணபம் அளித்துள்ளது.
இண்டிகோ
2,500 கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்துடன் அதிக சந்தை மதிப்புடைய தனியார் விமான நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் பங்குச்சந்தையில் இறங்க தேவையான பணிகள் செய்து வருகிறது. இதற்கான விண்ணப்பம் இன்னும் செபியிடம் அளிக்கப்படவில்லை.
2,000 கோடி ரூபாய்
சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் விண்ணப்பம் அளித்த 6 நிறுவனங்கள் 2,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
மேலும் திரட்டப்படும் நிதியை நிறுவன விரிவாக்கம், கடன் தொகையை செலுத்துதல், நிறுவன முதலீடு அதிகரித்தல் ஆகிய காரணங்களுக்குகாக பயன்படுத்தபடும் என இந்நிறுவனங்கள் கூறுகிறது.
2 சதவீத உயர்வு
இந்த ஆண்டு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுக்கு பங்குசந்தையில் இறங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவை அனைத்தும் அடுத்த சில மாதங்களில் சந்தையில் பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு ஆண்டில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 2 சதவீதம் உயர்ந்துள்ளது.