டெல்லி: டிசம்பர் மாத முடிவில் இந்தியாவின் மொத்த கடன் அளவு 3.5 சதவீதம் உயர்ந்து 461.9 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
மத்திய அரசு செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில், 2014ஆம் ஆண்டின் டிசம்பர் மாத முடிவில் நாட்டின் மொத்த கடன் அளவு கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 3.5 சதவீதம் அதிகரித்து 461.9 பில்லியன் டாலராக உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.
இந்தியாவின் கடன் அளவு மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டுகையில் இதன் அளவு 23.2 சதவீதமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 23.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
2014ஆம் ஆண்டில் மார்ச் மாத முடிவை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் நாட்டின் குறைந்த கால கடன் அளவு 6.7 சதவீதம் குறைந்து 85.6 பில்லியன் டாலராக உள்ளது.
அதேபோல் நீண்ட கால கடன் அளவு 6.1 சதவீதம் அதிகரித்து 376.3 பில்லியன் டாலராக உள்ளது என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.