கோட்டாக் மஹிந்திரா, ஐஎன்ஜி வைஸ்யா வங்கிகள் இணைய ஆர்பிஐ ஒப்புதல்!

மும்பை: நாட்டின் இரு முக்கிய தனியார் வங்கிகளான கோட்டாக் மஹிந்திரா வங்கி மற்றும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கி இணைய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இரு வங்கிகள் இணைப்பிற்கு பணியாளர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வந்த நிலையில் வங்கி நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் இணைப்பிற்கான ஒப்புதல் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது குறிப்பிடதக்கது.

4வது மிகப்பெரிய வங்கி

4வது மிகப்பெரிய வங்கி

இவ்வங்கிகள் இணைப்பதன் மூலம் இந்தியாவில் நான்காவது மிகப்பெரிய தனியார் வங்கியாக இக்கூட்டணி உருவாக உள்ளது.

ஏப்ரல் 1, 2015

ஏப்ரல் 1, 2015

செவ்வாய்கிழமை ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்ற இந்நிறுவனங்கள், ஏப்ரல் 1, 2015 அன்று முதல் அதிகாரப்பூர்வமாக இணைப்பு சாத்தியமாகும் என கோட்டாக் மஹிந்திரா வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

சொத்து பரிமாற்றம்

சொத்து பரிமாற்றம்

நிறுவன இணைப்பின் மூலம் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் கோட்டாக் மஹிந்திரா வங்கிக்கு மாற்றப்பட உள்ளது.

புதிய வங்கி

புதிய வங்கி

இப்புதிய கூட்டணி வங்கிக்கு இந்தியா முழுவதும் தற்போது 1,214 வங்கிகள் கொண்டு செயல்பட உள்ளது. மேலும் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியில் 10,000 பணியாளர்களும், கோட்டாக் மஹிந்திரா வங்கியில் 29,000 பணியாளர்களும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

15,000 கோடி ரூபாய்

15,000 கோடி ரூபாய்

கோட்டாக் மஹிந்திரா, ஐஎன்ஜி வைஸ்யா வங்கிகளுக்கு இடையே நடந்த இந்த இணைப்பு ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1,500 கோடி ரூபாயாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+