பெய்ஜிங்: சீன மொபைல் தயாரிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனமான ஜியோமி 12 மணிநேரத்தில் 21.1 லட்ச மொபைல்களை விற்று உலகச் சாதணை படைத்துள்ளது.
இந்நிறுவனத்தின் 5 ஆண்டு நிறைவு நாளை சிறப்பிக்கும் வகையில் ஜியோமி தனது தயாரிப்புகளுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளை அறிவித்திருந்தது.
சக்களத்தி சண்டை
இந்த விற்பனை துவங்கி 24 மணிநேரத்தில் சுமார் 21.1 லட்ச மொபைல் போன்களை விற்று இந்நிறுவனம் உலகச் சாதனை படைத்துள்ளது. இதனால் மொபைல் போன்களை விற்பனை செய்யத் தவித்துவரும் சாம்சங் நிறுவனம் கடுப்பாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் நிலை அடுத்த 5 வருடங்களுக்குத் தொடர்ந்தால், நோக்கிய போன்று கடையை மூட வேண்டிய நிலை உருவாகும்.
12 மணிநேர வருவாய்
இந்நிறுவனத்தின் சிறப்புத் தள்ளுபடியில் மொபைல் மற்றும் பிற பொருட்களின் விற்பனையின் மூலம் ஜியோமி நிறுவனத்திற்குச் சுமார் 2.08 பில்லியன் வான் ஆதாவது, 335 மில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது.
அலிபாபா நிறுவனம்
இதற்கு முன் அலிபாபாவின் டிமால்-இல் ஒரே நாளில் 1.89 மில்லியன் ஆதாவது 18.9 லட்சம் போன்களை விற்றது தான் உலகச் சாதணையாக இருந்தது.
டிவிட்டர்
ஜியோமி நிறுவனத்தின் இப்புதிய சாதனைக் குறித்துக் கின்னஸ் வேல்டு ரெக்கார்ட் நிறுவனத்தின் இணையான சீனா வெய்போ நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் இந்நிறுவனத்தின் தலைவர் லீ ஜுன் தெரிவித்தார்.
"24 மணிநேரத்தில் 2.11 மில்லியன் மொபைல் போன்களை விற்று ஜியோமி புதிய உலகச் சாதனை படைத்துள்ளது." எனத் தெரிவித்திருந்தார்.
2014ஆம் ஆண்டு
கடந்த நிதியாண்டில் ஜியோமி சுமாப் 61 மில்லியன் மொபைல்களை விற்று 74.3 பில்லியன் வான் வருவாய் ஈட்டியது.
இதன் மூலம் உலகளவில் ஸ்மார்ட்போன் சந்தையல3வது இடத்தையும், சீனாவில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தைப் பிடித்தது.
நிறுவன மதிப்பு
இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 45 பில்லியன் டாலராகும். உலகளவில் ஈகாமர்ஸ் சந்தையில் கொடிகட்டி பறக்கும் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஜியோமி நிறுவனத்தின் ஆஸ்தான முதலீட்டாளராக உள்ளார்.
நோக்கியா டூ சாம்சங் வரை
ஒரு காலத்தில் மொபைல் போன் விற்பனை மற்றும் வடிவமைப்பில் நோக்கியா மன்னனாகத் திகழ்ந்தது. தற்போது ஆண்ட்ராய்டு, ஆப்பிளின் ஐஓஎஸ்-களுடன் போட்டிப்போட முடியாமல் முடங்கிப் போனது.
இதன் வரிசையில் தற்போது சாம்சங் வருகிறது. இதைப் பற்றிப் படிக்கக் கிளீக் செய்யவும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications