3 மாத உச்சத்தில் தொழில்துறை உற்பத்தி!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவின் வளர்ச்சிக் குறித்து மூடிஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கை நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை நாட்டின் தொழில்துறை உற்பத்தி அளவும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

மார்ச் மாத்தில் இந்தியாவில் தொழில்துறை உற்பத்தி அளவு மூன்று மாத உயர்வை சந்தித்துள்ளது.

 
3 மாத உச்சத்தில் தொழில்துறை உற்பத்தி!

2014ஆம் நிதியாண்டின் கடைசி மாதமான மார்ச் மாத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி 5 சதவீதத்தை எட்டி 3 மாத உயர்வை சந்தித்துள்ளது. பிப்ரவரி மாத்தில் இதன் அளவு 2.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாத துவக்கத்தில் இந்திய நிறுவனங்களில் அதிகளவிலான ஆர்டர்கள் குவிந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களின் நாட்டின் உற்பத்தி அளவு அதிகளவில் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சி கணக்கீட்டில் செய்யப்பட்ட மாற்றத்தின் மூலம் 2015ஆம் நிதியாண்டில் இந்தியா 7.4 சதவீதம் வரை உயரும் என உலகின் முன்னணி அமைப்புகள் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் இந்தியா 8.1 முதல் 8.5 சதவீதம் வரையிலான வளர்ச்சியை எட்டும் என நம்பிக்கை தெரிவிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Industrial production growth at three-month high of 5% in February

A day after international ratings agency Moody's updated its outlook on India's credit rating, industrial production data provided more cheer on Friday, raising hopes that the economic growth is finally gathering some pace.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X