மும்பை: இந்திய பொருளாதாரம் அதிகளவிலான அன்னிய முதலீட்டுடன் வேகமான வளர்ந்து வரும் நிலையில்,பங்குச்சந்தையில் குதித்து முதலீட்டை திரட்ட இந்திய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் 12க்கும் அதிகமான நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இறங்குவதற்கான விண்ணப்பத்தை அளித்துள்ளது.
இதில் கத்தோலிக் சிரியன் வங்கி, அமர் உஜாலா பதிப்பகம் மற்றும் பிரபாத் டைரி ஆகிய நிறுவனங்கள் அடக்கம்.
3,000 கோடி ரூபாய்
மத்திய அரசின் நிலையான வர்த்தகத் திட்டங்களின் மூலம் இந்திய சந்தையில் அந்நிய முதலீடுகள் குவித்த வண்ணம் உள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் சந்தையில் இறங்கிய நிறுவனங்கள் சுமார் 3,019 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகச் செபி தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பெரிய நிறுவனங்கள் எதுவும் சந்தையில் இறங்கவில்லை என்றாலும் சந்தை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
ஐநாக்ஸ்
கடந்த வரும் சந்தையில் அதிகளவில் நிதி திரட்டிய நிறுவனங்களில் ஐநாக்ஸ் வின்ட் முன்னணிலை வகிக்கிறது. இந்நிறுவனம் சுமார் 1,020 கோடி ரூபாய் சந்தையில் இருந்து முதலீடாகப் பெற்றுள்ளது.
செபி
பங்குச்சந்தையில் இறங்குவதற்காக நிறுவனங்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்தப்பின்னர், தனது முடிவுகளைச்செபி வெளியிடும்.
103 நிறுவனங்கள்
செபி அமைப்பு கடந்த ஏப்ரல் மாதம் 2009ஆம் வருடத்தில் இருந்து இன்று வரை சுமார் 103 நிறுவனங்களுக்குப் பங்குச்சந்தையில் இறங்குவதற்காக அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

Out Of Stock ஆன இண்டக்ஷன் ஸ்டவ்.. பங்குச்சந்தையில் கில்லி ஆக மாறிய 3 பங்குகள்.. ரெடியாகும் முதலீட்டாளர்கள்..!!

ரூ.7 லட்சம் கோடி மாயம்.. பங்குச்சந்தையில் என்ன தான் நடக்குது..?

சிங்கப்பூரில் இருந்து தாயகம் திரும்பும் பிளிப்கார்ட்! இந்தியாவில் IPO களமிறங்க மெகா திட்டம்!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications