சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் சூப்பர் பைக் மற்றும் சூப்பர் கார்களுக்கு மக்களிடம் ஏக மவுசு. இதன் எதிரொலியாகத்தான் இந்தியாவில் சூப்பர்பைக் விற்பனை 50 சதவீதம்உயர்ந்துள்ளது.
குறிப்பாக இந்தியாவின் பெருமை மிகு தயாரிப்பான புல்லட் விற்பனையில் கலக்கி வருகிறது.
சூப்பர்பைக் விற்பனை
இந்தியாவில் 2008-09ஆம் ஆண்டுக் காலத்தில் சூப்பர்பைக் விற்பனை 450 என்ற எண்ணிக்கையில் இருந்து 3,500 ஆக (2013-14ஆம் ஆண்டுகளில்) உயர்ந்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் இதன் விற்பனை அளவு 9,500 ஆக உயரும் எனவும் 2020 ஆண்டில் குறைந்தது 20,000 என்றஎண்ணிக்கையை எட்டும் என டிரையம்ப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் விமல் சம்பிளி தெரிவித்தார்.
பைக் சந்தை
இந்தியாவில் 500 சிசி-க்கும் அதிகமானப் பைக்குகளைச் சூப்பர் பைக் ரகத்தில் சேர்க்கப்படுகின்றன. இச்சந்தையில் ராயல்என்பீல்ட் மற்றும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளின் விற்பனை ஒவ்வொரு வருடமும் 40 முதல் 50 சதவீதம் உயர்வைச் சந்தித்து வருகிறது.
60-65 சதவீத சந்தையை இவ்விரு நிறுவனங்கள் பெற்றுள்ளது எனச் சந்தை ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
பிற நிறுவனங்கள்
டிரையம்ப், யாமஹா, ஹோண்டா, கவாசாகி, சுசூகி, மற்றும் டிஎஸ்கே மோட்டார் வீல்ஸ் ஆகிய நிறுவனங்களும் இந்திய சந்தையில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வைச் சந்தித்து வருகிறது.
ஆதிக்கம்
இந்தியச் சந்தையைப் பொருத்த வரை ராயல் என்பீல்ட் கான்டினென்டல் ஜிடி மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் சூப்பர்பைக் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்திய சந்தைக்குள் புதிதாக நுழைந்த டுக்காட்டி மற்றும் பெனிலி ஆகிய நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவில்உயர்வைச் சந்தித்து வருகிறது.
அதிகப்படியான விலை
இந்தியாவில் ஆடம்பர கார் விற்பனையை ஒப்பிடுகையில் சூப்பர் பைக் விற்பனை மிகவும் குறைவே. இதற்கு முக்கியக் காரணம், சூப்பர் பைக்கின் விலை, துவக்க நிலை ஆடம்பர கார்களின் விலைக்கு இணையாக உள்ளது.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகளவில் கார்களைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.