டெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி அதிகளவில் குறைந்துள்ளதால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மார்ச் மாதத்தில் 11.79பில்லியன் டாலரை எட்டி நான்கு மாத சரிவை சந்தித்தது.
இதனால் ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கச்சா எண்ணெய்
கடந்த நிதியாண்டின் ஜூன் மாதம் முதலே கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் நாட்டின்இறக்குமதி மதிப்பு அதிகளவில் குறைந்தது. இதனால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை மேம்பட்டது.
இதன் காரணமாகவே தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி கட்டணங்களை மத்திய அரசு குறைத்தது.
மோடியின் இலக்கு
பிரதமர் மோடி பதவியேற்றிய நாள் முதல் உலகின் பல முக்கியப் பொருளாதார நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்,இதில் அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அடக்கம்.
இந்தப் பயணங்களின் மூலம், இந்தியா பல வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது. இதன் மூலம் அடுத்த 4 வருடங்களில்நாட்டின் ஏற்றுமதி அளவு 900 பில்லியன் டாலராக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்யுள்ளது.
2014ஆம் நிதியாண்டு
வெள்ளிக்கிழமை மத்திய அரசு வெளியிட்ட வருடாந்திர வர்த்தக நிலை அறிக்கையில் நாட்டின் ஏற்றுமதி 1.2 சதவீதம்குறைந்து 310.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இறக்குமதியில் இதன் அளவு 0.6 சதவீதம் குறைந்து 447.6 பில்லியன்டாலரை அடைந்துள்ளதாகத் தெரிவித்திருந்தது.
வர்த்தகப் பற்றாக்குறை
இதன் மூலம் நாட்டின் மொத்த வர்த்தகப் பற்றாக்குறை 137 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன்அளவு 135.8 பில்லியன் டாலராக இருந்தது.