டெல்லி: பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் பவுன்டேஷன் அமைப்பின் துணை தலைவரான மெலின்டா கேட்ஸ், பிரதமர் மோடி ஏழைகளின் வாழ்க்கை முறையை மேம்படுத்த வகுத்துள்ள திட்டங்களை நேரில் சந்தித்துப் பாராட்டினார்.
இதில் குறிப்பாக ஸ்வச் பாரத் மற்றும் ஜன் தண் யோஜ்னா திட்டங்களை வெகுவாகப் பாராட்டினார்.
மோடி- மெலின்டா கேட்ஸ்
இச்சந்திப்பில் மெலின்டா கேட்ஸ் நிறுவனம் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள Newborn Health Care திட்டம் மற்றும் எதிர்காலத் திட்டங்களும் அதனுடைய விரிவாக்கம் குறித்துப் பேசினார்கள்.
ஜே.பி. நாடா
பிரதமர் உடனான சந்திப்பு முடிந்த உடன், நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான ஜே.பி. நாடா அவர்களைச் சந்தித்தார்.
பில் மற்றும் மெலின்சா கேட்ஸ் பவுன்டேஷன்
உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இணைந்து உலகில் உள்ள ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பில் மற்றும் மெலின்சா கேட்ஸ் பவுன்டேஷன் என்னும் அமைப்பைத் துவங்கியுள்ளனர்.
சுகாதாரம்
இந்த அமைப்பு இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருவதாக இந்நிறுவனத் தகவல் குறிப்புகள் தெரிவிக்கிறது. இந்தியாவில் பில் மற்றும் மெலின்சா கேட்ஸ் பவுன்டேஷன் நாட்டு மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளது.
அருண் ஜேட்லி
இந்தியாவில் இவ்வமைப்பின் Newborn Health Care திட்டத்தைத் துவங்கும் விழாவில் கலந்துகொண்ட பில் மற்றும் மெலின்டா கேட்ஸ். நிகழ்ச்சி முடிந்த பின் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் நேரில் சந்தித்தனர்.


Click it and Unblock the Notifications