மும்பை: தனியார் வங்கித்துறையில் குறுகிய காலத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் யெஸ் வங்கி 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குளை விற்கத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு யெஸ் வங்கி நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது. பங்கு விற்பனை துவங்கும் முன் இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்பதில் பெற வேண்டும்.
1 பில்லியன் டாலர்
வங்கிச் சொத்து மதிப்பில் தனியார் வங்கித்துறையில் 5வது இடத்தில் இருக்கும் யெஸ் வங்கி, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பங்கு விற்பனையின் மூலம் 1 பில்லயன் டாலர் நிதி திரட்டும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
வளர்ச்சி மற்றும் விரிவாக்கம்
இந்த 1 பில்லியன் டாலர் நிதியை நிறுவனத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் பணிகளுக்காகப் பயன்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
தவணை விற்பனை
இவ்வங்கி பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் இப்பங்கு விற்பனை இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.
500 மில்லியன் டாலர்
கடந்த மே மாதம் முதல் இவ்வங்கி பங்கு விற்பனையின் மூலம் 500 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது.
551 கோடி ரூபாய்
2014ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 28 சதவீதம் உயர்ந்து 551 கோடி ரூபாயாக உள்ளது.