மும்பை: இந்திய வங்கி அமைப்பில் ஆண், பெண் பாலின பிரிவில் மூன்றாவதாகத் திருநங்கைகளையும் இணைக்க ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் இனி வங்கிகளில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், படிவங்கள் மற்றும் பிற சேவைகளில் என்ற அனைத்திலும் பாலின பிரிவில் திருநங்கைகள் இணைக்கப்பட உள்ளனர்.
இதன் மூலம் இவர்களுக்குக் கடன் உதவி, சேமிப்பு கணக்குபோன்ற அனைத்து வகையான வங்கி சேவைகளும் எளிமையாகப் பெற முடியும்.
ஆர்பிஐ
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் திருநங்கைகள் வங்கி கணக்கு மற்றும் பிற வங்கி சேவைகள் பெறமுடியாத நிலையை உணர்ந்து, அவர்களின் வாழ்க்கை முறை மேம்பட இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளோம்எனத் தெரிவித்தது.
பாலின பிரிவு
ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அளித்த ஆணையில், இனி வங்கிகளில் அளிக்கப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும்பாலின பிரிவில் மூன்றாம் பிரிவான திருநங்கைகள் இணைக்கப்பட வேண்டும்.
இதற்கான வேலைகளை வங்கி நிர்வாகம் விரைவாக மேற்கொள்ள வேண்டும்," என ஆர்பிஐ குறிப்பிட்டுள்ளது.
உச்ச நிதிமன்றம்
சுப்ரீம் கேர்ட்டில் இதற்காக நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் திருநங்கைகள் தங்களுக்கான பாலினத்தை வெளிப்படையாக அறிவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குச் சட்டரீதியிலான அங்கீகாரம் அளித்துள்ளது.
வங்கிகள் பதில்
ரிசர்வ் வங்கி ஆணையை ஏற்ற வங்கிகள், விண்ணப்பங்கள் மற்றும் படிவங்களில் உடனடியாக மாற்றத்தைச் செய்ய முடியும் என்றாலும், ஆன்லைன் சேவை மற்றும் பிற மென்பொருள் சேவைகளில் மாற்றம் செய்யச் சில வாரங்கள் தேவை எனத்தெரிவித்துள்ளது.
விரைவில் மாற்றம்
வங்கித் துறையில் நிகழ்ந்த இந்த மாற்றம் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் உருவாக்கப்படும் போது இவர்களின்வாழ்க்கை முறை கண்டிப்பாக மேம்படும்.
இவர்களும் சக மனிதர்களைப் போல இந்தியாவில் வாழ முடியும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications