டெல்லி: நாட்டின் முன்னணி மொபைல் சேவை நிறுவனமான ஏர்டெல் 2014ஆம் நிதியாண்டில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதால், இந்நிறுவனத்தின் வருடாந்திர லாப அளவு சுமார் 87 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது.
மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த 2014ஆம் நிதியாண்டில் ஏர்டெல் நிறுவனத்தின் லாப அளவு 5,183 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 2,773 கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடதக்கது.

இக்காலக்கட்டத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.85,746 கோடியில் இருந்து 7.3 சதவீதம் உயர்ந்து 92,039 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் மொபைல் டேட்டா சேவையின் மூலம் கிடைக்கப்பெறும் மொத்த லாபம் 30 சதவீதம் உயர்ந்து 1,255 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதன் அளவு 962 கோடி ரூபாயாக இருந்தது என ஏர்டெல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications