டெல்லி: பல பிரச்சனை மற்றும் குழப்பங்களில் சிக்கித் தவிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பொறுப்புகள் அஜய்சிங்குக்கு கைமாறி சில மாதங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
கடந்த மாதம், இந்நிறுவனத்தில் இருந்து தலைமை வர்த்தக அதிகாரியான கனிஷ்வரன் அவிலி வெளியேறிய நிலையில்,தற்போது தகவல் தொழில்நுட்பத் பிரிவின் உயர் துணை தலைவரான சுதாகர் கொண்டிசெட்டி நிறுவனத்தை விட்டுவெளியேறினார்.
செலவுக் குறைப்பு
இந்நிறுவனத்தின் நிதிநிலையை மேம்படுத்த ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் செலவுக் குறைப்பு நடவடிக்கையில்இறங்கியுள்ளது. இதனால் அடுத்தச் சில மாதங்களிலும் அதிகச் சம்பளம் வாங்கும் பல பணியாளர்கள் நிறுவனத்தை விட்டுவெளியேற உள்ளதாகத் தெரிகிறது.
சுதாகர் கொண்டிசெட்டி
கடந்த மாதமே நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்த சுதாகர், ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளில் ஸ்பைஸ்ஜெட்நிர்வாகக் குழுவின் ஒப்புதலும் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
கலாநிதி மாறன்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதி மாறன் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இந்நிறுவனத்தின் உயர் துணை தலைவராகக்கடந்த வருடத்தில் மார்ச் மாதம் நிறுவனத்தில் இணைந்தார் சுதாகர்.
அஜய் சிங்
2010ஆம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொண்ட அஜய் சிங், சில மாதங்களுக்கு முன் கலாநிதிமாறன் மற்றும் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவன வசம் இருந்த 58.46 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார்.
இதன் பின் நிறுவன பொறுப்புகள் அனைத்தும் அஜய் சிங்கிற்குக் கைமாறியது.
1,500 கோடி முதலீடு
ஸ்பைஸ்ஜெட் நிறுவன பொறுப்புகளை ஏற்ற அஜய் சிங், நிறுவன செயல்பட்டிற்காகச் சுமார் 1500 கோடி ரூபாய்க் கொண்டுவருவதாக உறுதிக்கொண்டார்.
இதுவரை அஜய் சிங் தலைமையில் நிறுவன செயல்பாட்டிற்காகச் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications