மும்பை: 2014ஆம் நிதியாண்டின் 4வது காலாண்டில் நாட்டின் 5வது மிகப்பெரிய தனியார் வங்கியான கோட்டா மஹிந்திரா வங்கியின் லாப அளவு 29.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இவ்வங்கியின் லாபம் 527 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் வங்கியின் பங்குதாரர்களுக்கு 1:1 சதவீதத்தில் போன்ஸ் பங்குகள் அளிக்கவும் கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
சந்தையின் கணிப்பின் படி இக்காலாண்டில் வங்கி சுமார் 485.7 கோடி ரூபாய் லாபம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டநிலையில், 527 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது கோட்டாக் மஹிந்திரா வங்கி.
சமீபத்தில் இவ்வங்கி ஐஎன்ஜி வைஸ்யா வங்கியை கைபற்றி நாட்டின் 5வது மிகப்பெரிய தனியார் வங்கியாகஉருவெடுத்துள்ளது.