மும்பை: அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் முதலீட்டுக் குறைப்புப் புதன்கிழமை இந்திய சந்தையில் உச்சம் பெற்றிருந்தது.
ஓரே நாளில் 630 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு மற்றும் பத்திரங்களை விற்று பங்குச் சந்தையைப் பாதாளத்திற்குக் கொண்டு சென்றனர்.
கடந்த ஜனவரி 2014ஆம் வருடத்திற்குப் பின் புதன்கிழமையன்று அதிக மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பங்குச் சந்தை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த நிலை?
அன்னிய போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (FPI) இந்திய சந்தையில் செய்த முதலீட்டுக்கான வரியை செலுத்த வருமான வரித்துறை நிர்பந்தம் செய்ததால், முதலீட்டாளர்கள் தங்களது இருப்பைக் குறைத்துக் கொண்டனர்.
மாட் வரி
இந்திய நிறுவனங்கள் FPI-களுக்கு அளித்த போனஸ் பங்குகள் மற்றும் பங்கு பரிமாற்றத்திற்கான மினிமம் ஆல்டர்நேடிவ் டாக்ஸ் (MAT) செலுத்த வருமான வரித்துறை, முதலீட்டாளர்களுக்கு நோட்டிஸ் அளித்தது.
முதலீட்டுக் குறைப்பு
இதன் காரணமாகக் கடந்த 4 நாட்களாக இந்தியா சந்தையில் இருந்து முதலீடு அதிகளிவில் முதலீட்டாளர்கள் குறைத்தனர். இதன் உச்சக்கட்டமாகப் புதன்கிழமை 630 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் மற்றும் பத்திரங்கள் இந்திய சந்தையில் விற்கப்பட்டுள்ளது.
877 மில்லியன் டாலர்
இதேபோன்ற நிலை ஜனவரி 27, 2014ஆம் வருடம் உருவானது.
அமெரிக்கப் பெடரல் ரிசர்வ், அரசு பத்திரங்களுக்கான வட்டி வகிதத்தை உயர்த்துவதாக அறிவித்ததன் மூலம் உலக நாடுகள் இந்திய சந்தையில் செய்த முதலீட்டை அதிகளவில் குறைத்தது.
இதன் எதிரொலியாகச் சுமார் 877 மில்லயன் டாலர் அளவு முதலீடு குறைந்ததாகப் பங்குச் சந்சை அறிக்கை தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகம்
மத்திய அரசு, மாட் வரி விதிப்பில் ஆய்வு செய்வதாக வியாழக்கிழமை மாலை அறிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பங்குச்சந்தையில் முதலீடு குவிந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் 480 புள்ளிகள் வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications