பெங்களூரு: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மைந்த்ரா நிறுவனம் தனது டெஸ்க்டாப்இணையதளச் சேவையை மே 15ஆம் தேதி முற்றிலும் நிறுத்திவிட்டு மொபைல் ஆப்-கள் மூலம் சேவை அளிப்பதாகஅறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை மிந்திரா நிறுவன வாடிக்கையாளர் அனைவருக்கும் இமெயில் மூலமாகத் தெரிவித்துள்ளது.
இமெயில்
மிந்திரா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய இமெயிலில், "மே 15ஆம் தேதி முதல் மிந்திரா நிறுவனம்புதிய முயற்சியின் மூலம், எதிர்கால ஷாப்பிங் அனுபவத்தை உங்களுக்கு அளிக்க உள்ளது. குறிப்பிட்ட தேதியன்றுமிந்திரா நிறுவனம் டெஸ்க்டாப் தளச் சேவையை நிறுத்திவிட்டு முற்றிலும் மொபைல் தளமாக மாற உள்ளது." என்றுதெரிவித்திருந்தது.
வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை
இந்நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மொபைல் சேவையின் பக்கம் திரும்பியதால் இணையதளச்சேவையின் பயன்பாடு அதிகளவில் குறைந்துள்ளது.
மொபைல் சேவை
இந்நிலையில் மைந்த்ரா நிறுவனத்தின் கவனம் முழுவதும் தற்போது மொபைல் சேவையை மேம்படுத்தி இதன் மூலம்வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மொபைல்சேவை மட்டும் அளிக்கும் ஒரு ஈகாமர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி இரு மடங்கு உயரும் எனச் சந்தை கணிப்புகள்தெரிவிக்கிறது.
பிளிப்கார்ட்
மிந்திரா நிறுவனத்தைப் பிளிப்கார்ட் கைப்பற்றியதை தொடர்ந்து இந்நிறுவனம் பல புதிய முயற்சிகளைச் செய்துவருகிறது. மேலும் இந்நிறுவனத்தின் விற்பனையும் கணிசமான உயர்வைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கத்து.
மொபைல் ஆப்
இந்நிறுவனத்தின் மொபைல் ஆப்புகள் அனைத்துத் தளப் பயன்பாட்டாளர்களுக்கு அளிக்க உள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.