சென்னை: பிரிக்ஸ் வங்கி அமைவதன் மூலம் இந்தியாவிற்குக் கிடைக்கப்பெறும் ஆதாயங்களை நேற்று வெளியிட்டு இருந்தோம், இன்று இதனால் ஏற்பட உள்ள பாதிப்புகளைப் பார்க்கப்போகிறோம்.
நாணயத்தியத்திற்கு இரு பக்கம் இருப்பது போல ஒரு திட்டத்தில் நன்மையும் உண்டு பாதிப்பும் உண்டு. அதைப்போல் இத்திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ஏற்பட உள்ள குறைபாடுகள் மற்றும் பாதிப்புகளை இங்கே பார்க்கலாம் வாங்க.
முதலீட்டுத் தொகை போதாது
இவ்வங்கியில் முதலீட செய்யப்படும் 50 பில்லியன் டாலர் தொகை, மொத்தமும் இந்தியாவிற்குக் கொடுத்தாலும், நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டத்திற்குத் தேவைப்படும் 1 டிரில்லியன் டாலர் தொகைக்கு ஈடுசெய்ய முடியாது.
சீனாவில் பிரிக்ஸ்
பிரிக்ஸ் வங்கி சீனாவின் பெய்ஜிங் மாகாணத்தில் அமைவதால், இங்கு அதிகளவிலான பணியாளர்கள் சீன நாட்டினவராக இருப்பார்கள். இதனால் இங்கு வடிவமைக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் சீனாவிற்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
முதலீடுகள்
5 நாடுகளில் இருந்து செய்யப்படும் முதலீடு அனைத்தும் சீனாவில் குவிய உள்ளதால், மதிப்பீடுகள் அனைத்தும் யுவான் நாணயத்தில் இருக்கும்.
இதனால் அமெரிக்க டாலருக்கு அடுத்தப்படியாக அதிகளவில் வர்த்தகம் செய்ய நாணயமாக யுவான் உருவாகும். அதனால் என்ன என்று கேட்க வேண்டாம்.. சர்வதேச சந்தையில் ரூபாய் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது.
40 சதவீதம் சீனா கையில்
இவ்வங்கியில் முதலீடு செய்யப்படும் 100 பில்லியன் டாலர் தொகையில் 40 சதவீத சீனா செய்வதாக ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவிற்கு அளிக்கப்படும் நிதியுதவியில் வட்டி வகிதத்தைக் குறைக்கச் சில கெடுபிடிகள் நிலவும்.
காலம் பதில் சொல்லும்
தற்போதைய நிலையில் பார்க்கும்போது, பொறுப்பை மட்டும் இந்தியாவிடம் கொடுத்துவிட்டு செயல்பாடு அனைத்தும் சீனா பார்த்துக்கொள்வதாகத் தெரிகிறது.
கே.வி.காமத் பிரிக்ஸ் வங்கியின் பொறுப்புகள் ஏற்றப்பின் உண்மையான நிலவரம் தெரியவரும்.