டெல்லி: சிண்டிகேட் வங்கியின் முன்னாள் தலைவர் சுதீர் குமார் ஜெயின் பணி நீக்கம் செய்த பிறகு நிதியமைச்சகத்தின் பலகட்ட ஆய்வு மற்றும் தேர்வுகளுக்குப் பின் அருண் ஸ்ரீவஸ்தவ அவர்களை இவ்வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும்தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வங்கியின் பொறுப்புகளில் மே 15ஆம் முதல் (இன்று) முதல் செயல்பட உள்ளார்.
இதன் காரணமாகப் பங்குச் சந்தையில் சிண்டிகேட் வங்கியின் பங்குகள் 1.25 புள்ளிகள் மட்டுமே சரிந்து 109.75 ரூபாயில்இந்நிறுவனப் பங்குகள் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சிண்டிகேட் வங்கியின் முன்னாள் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான சுதீர் குமார் ஜெயின் மீது லஞ்ச ஒழிப்புபுகாரின் பெயரில் நிதியமைச்சகம் இவரைப் பணியில் இருந்து நீக்கியது.
நிறுவனங்களின் கடன் அளவீட்டை உயர்த்த சுதிர் தத்தம் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் வங்கியதாகவும், சிபிஐசோதனையில் லஞ்சப் பணம் சுமார் 50 லட்சம் கைப்பற்றியுள்ளது. மேலும் பல சொத்து பத்திரங்களும் கைபற்றப்பட்டு உள்ளதாகச் சிபிஐ தெரிவித்தது.