டெல்லி: ரிசர்வ் வங்கி வருகிற ஜூன் 2ஆம் தேதி வெளியிட உள்ள இரு மாத மறுஆய்வுக் கொள்கையில், வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி வகிதத்தைக் கண்டிப்பாகக் குறைக்கும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி இரண்டு முறை வட்டி வகிதத்தைக் குறைத்தாலும், வணிக வங்கிகள் ஒரு முறை தான் கடனுக்கான வட்டி விகித்தை குறைத்தது.
பணவீக்கம்
இந்திய தற்போது பணவாட்டம் நிலையில் உள்ளதால், ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்த வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
ரெப்போ விகிதம்
ஆர்பிஐ, வணிக வங்கிகளுக்கும் அளிக்கப்படும் கடனுக்கான வட்டி வகிதகம் (Repo Rate) தற்போது 7.5 சதவமாக இருக்கிறது. மேலும் பண இருப்பு விகித (CRR) அளவு 4 சதவீதமாக உள்ளது.
ஜூன் 2
வருகிற ஜூன் 2ஆம் தேதி ரிசர்வ் வங்கி, குறைந்தது 0.25 சதவீதமாவது வட்டி வகிதத்தைக் குறைக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
பொருளாதார வளர்ச்சி
நாட்டில் நிலவும் பணவாட்டம் மற்றும் மந்தமான பொருளாதார வளர்ச்சி ஆகியவை ரிசர்வ் வங்கியை வட்டி விகித குறைப்புச் செய்ய நிர்பந்தம் செய்துள்ளது.
நாட்டின் பொருளாதாகம் மற்றும் வர்த்தகத்தை அதிகரிக்கச் செயற்கையாகப் பணவீக்கத்தை உருவாக்கவே ரிசர்வ் வங்கி வட்டி வகிதத்தைக் குறைக்க உள்ளது.
பருவகாலம்
மேலும் பணவாட்டத்தைக் குறைக்கும் விதமாகப் பருவக்கால அறுவடை வருவதால் உணவு பணவீக்கம் குறைந்து பணவட்ட நிலை மேம்படும், இதனால் ரிசர்வ் வங்கி வட்டி வகிதத்தைக் குறைக்காமலும் போகலாம்.
எண்ணெய் மற்றும் உற்பத்தி
நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு, எண்ணெய் விலை மற்றும் உற்பத்தி பொருட்களின் விலை கடந்த 3 மாதங்களில் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் பணவாட்டம் மேலும் அதிகரித்து 2.65 சதவீதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications