பெங்களூரு: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அதிகளவில்மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான இன்போசிஸ்நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 176,187 எட்டியுள்ளது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அதிகம் சம்பளம் வாங்குவதுயார் தெரியுமா..
இன்போசிஸ்
மென்பொருள் துறையில் இன்போசிஸ் நிறுவனம் 2014ஆம் ஆண்டில்மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின்சீஇஓ மாற்றம்.
முதல் முறையாக இந்நிறுவனத்திற்கு நிறுவனர் அல்லாத ஒரு நபர்சிஇஓவாக நியமிக்கப்பட்டார்.
டாப் 5
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கும்டாப் 5 பணியாளர்களைத் தற்போது பார்க்கப்போகிறோம்.
விஷால் சிக்கா
எஸ்ஏபி நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்துவெளியேறிய விஷால் சிக்கா இன்போசிஸ் நிறுவனத்தில் இணைந்தார்.
தற்போது விஷால் சிக்காவின் வருடாந்திர சம்பளம் 900,000 டாலர், இதில்வர்த்தக இலக்கை அடைந்தால் இன்போசிஸ் நிறுவனம் அளிக்கும் 4.18மில்லியன் டாலர் போன்ஸூம் அடக்கம்.
அதுமட்டும் அல்லாமல் 2 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு இருப்பும்இவர் பெற்றுள்ளார்.
யுபி பிரவீன் ராவ்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தான் இந்த யுபிபிரவீன் ராவ். இந்நிறுவனத்தின் உயர்மட்ட பணியாளர்கள் வெளியேறியநிலையில் அடுத்தச் சீஇஓ இவர் தான் என்று அனைவரும் எதிர்பார்க்கும்நிலையில் இவர் இருந்தார்.
இவரின் வருடாந்திர சம்பளம் 616,509 டாலர், இதில் போன்ஸ்,ஊக்கத்தொகை என அனைத்தும் அடக்கம்.
மேலும் இவர் இன்போசிஸ் பிபிஓ நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலும்இருக்கிறார்.
ராஜீவ் பன்சால்
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜீவ் பன்சால்ஆண்டுக்கு 770,858 டாலர் வருமானமாகப் பெறுகிறார்.
இவர் இன்போசிஸ் நிறுவனத்தில் 1999ஆம் வருடம் இணைந்தார்.
ஸ்ரீகாந்தன் மூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவரான ஸ்ரீகாந்தன்மூர்த்தி வருடத்திற்றுப் போன்ஸ், ஊக்கத்தொகை என அனைத்தும்சேர்த்து 658,636 டாலர் பெறுகிறார்.
டேவிட் டி கென்னடி
இந்நிறுவனத்தில் அதிகச் சம்பளம் வாங்கும் பணியாளர்களில் ஒரே ஒருவெளிநாட்டவர் இடம்பெற்றுள்ளார். இவர் பெயர் டேவிட் டி கென்னடி,இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் பொதுஆலோசகராக உள்ளார்.
இவர் வருடத்திற்கு 209,701 டாலர் வருமானமாகப் பெறுகிறார்.
பணியாளர்கள் வெளியேற்றம்
ஊதிய உயர்வு
சில வருடங்களாக நிறுவனத்தின் நிதி மற்றும் வர்த்தக நிலை மோசமாகஇருந்த காரணத்தினால் பணியாளர்களுக்குச் சம்பள உயர்வுஅளிக்கப்படவில்லை. புதிய சீஇஓ தலைமையில் தற்போதுபணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது.
சில பணியாளர்களுக்குப் போனஸ் பங்குள் மற்றும் போனஸ்தொகைகூடக் கிடைத்தது. இந்நிலையில் பலரின் சம்பளம் உயர்ந்தது.


Click it and Unblock the Notifications