டெல்லி: மத்திய அரசு கல்வித் துறைக்கும் செலவீடும் 80 சதவீத பணம், ஆசிரியர்களின் சம்பளம், பயிற்சிக்காக மட்டுமே செலவீடப்படுவதாக இந்தியா ஸ்பென்டு தெரிவித்துள்ளது.
6 மாநிலங்களின் பள்ளிக் கல்வித் துறையில் செய்த ஆய்வில் இந்தியா ஸ்பென்டு இந்தத் தகவலை அளித்துள்ளது.
கல்வித் தரம்
கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் 80 சதவீத தொகையை அசிரியர்களுக்காக மட்டும் செலவு செய்து வரும் இந்தியாவில், இன்னமும் தரமான பள்ளிக்கல்வி பல மாநிலங்களில் கிடைக்கவில்லை என்பது தான் இன்றைய இந்தியாவின் உண்மை நிலை.
பிரிக்ஸ் நாடுகள்
மேலும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிபரிக்கா ஆகிய கூட்டணியில் உருவான பிரிக்ஸ் நாடுகள் கூட்டணயில், இந்தியாவில் ஆசிரியர்கள் பற்றாக்குறையாக அதிகளவில் உள்ளதாகவும் இந்த ஆய்வுத் தெரிவித்துள்ளது.
மேலும் இந்தியாவை விடவும் ஏழை நாடுகள், தன் மக்களுக்குச் சிறப்பான கல்வியை அளித்து வருவதாகும் இந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கிறது.
பைசா 2015
இந்தியாவில் கல்விக்காக ஒதுக்கப்படும் ஒட்டுமொத்த தொகையில் ஆசிரியர்களுக்கு 80 சதவீதமும், குழந்தைகளுக்கு 5 சதவீதமும், நிர்வாகத்திற்கு 5 சதவீதமும், பள்ளிகளுக்கு 5 சதவீத தொகை செலவிடப்படுவதாகப் பைசா 2015 ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
94 பில்லியன் டாலர்
கடந்த 10 வருடத்தில் ஆசிரியர்களுக்கு மட்டும் இந்திய அரசு 94 பில்லியன் டாலர் ஆதாவது 5,86,085 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
இவ்வளவும் பணம் செலவு செய்தாலும் இந்தியாவில் பல பகுதிகளில் கல்வித்துறை முன்னேற்றம் அடைவில்லை.
மகாராஷ்டிரா
ஆசிரியர் பயிற்சிக்காக மத்திய அரசு பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து வருகிறது. இந்நிலையிலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 90 சதவீத ஆசிரியர்கள் தகுதி தேர்வில் தேர்வாகவில்லை என்பது தான் வருத்தம்.
படிக்காதவர்கள்
இந்தியா ஸ்பென்டு நிறுவனத்தின் ஆய்வின் முடிவில் இந்தியாவில் இன்னும் 282 மில்லியன் குடிமக்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.
உயர் கல்வி
மேலும் பள்ளியில் படித்து வரும் குழந்தைகள் 50 சதவீதம் பேர் மட்டுமே உயர் கல்வி அல்லது கல்லூரிக்குச் செல்வதாகப் புள்ளி விபரம் கூறுகிறது.
More From GoodReturns

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications