2ஆம் தர நகரங்களில் ஹை-டெக் முறையில் வருமான வரித்துறை சோதனை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் இரண்டாம் தர நகரங்களான ஜெய்ப்பூர், சூரத், லக்னோ போன்ற வளர்ச்சி மிகுந்த இடங்களில் வருமான வரித்துறை சிறப்புத் தகவல்கள் மற்றும் சோதனை முறையைக் கொண்டு அதிக வருமானம் பெறுபவர்களைக் கண்டறிய திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் 2ஆம் தர நகரங்களில் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகளவில் உயர்த்த வருமான வரித் துறை முடிவுசெய்துள்ளது.

புதிய செயல்திட்டம்

புதிய செயல்திட்டம்

அடுத்த மாத துவக்கத்தில் வருமான வரித் செலுத்துவோர் மீது மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவிக்க உள்ளது, இதனை வருமான வரித்துறை மற்றும் மத்திய சுங்கம் மற்றும் கலால் வரித்துறை செயல்படுத்த உள்ளது.

இப்புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் 25லட்சம் பேரை வருமான வரி செலுத்துவோர் பட்டியலுக்குக் கீழ்கொண்டு வர வேண்டும் என நிதியமைச்சகம் வருமான வரித்துறையை அறிவுறுத்தியுள்ளது.

 

ஸ்மார்ட் சிஸ்டம்

ஸ்மார்ட் சிஸ்டம்

இதுகுறித்து வருமான வரித் துறை ஆதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தியாவில் 2ஆம் தர நகரங்களில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்தும் பணியில் எந்த விதமான தடை மற்றும் குறைபாடுகள் ஏற்படாமல் இருக்க ஸ்மார்ட் டெக்னிக்கல் இண்டலிஜென்ஸ் மற்றும் பிஸ்னஸ் கம்பியூடேஷன் டேட்டாபேஸ் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என அவர் தெரிவித்தார்.

வருமான வரி

வருமான வரி

இப்புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட திட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் வருமான வரி சொலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கலந்துகொள்ளும் இரண்டு நாள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.

இக்கூட்டம் திங்கட்கிழமை (இன்று) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

இந்த ஆலோசனை கூட்டத்தைத் தலைநகர் டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி துவங்கி வைக்கிறார்.

 2ஆம் தர நகரங்கள்

2ஆம் தர நகரங்கள்

இந்தியாவில் 2ஆம் தர நகரங்கள் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. மேலும் இங்கு வருவாய் அதிகரிப்பதற்கான சாத்திக்கூறுகள் அதிகம் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

I-T to scan tier-II cities to bring more people in tax net

The Income Tax department has decided to use technical intelligence and pay special focus on tier-II cities like Jaipur, Surat and Lucknow among others, to bring more and more people living in these "progressive" cities under the tax net.
Story first published: Monday, May 25, 2015, 13:57 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X