டெல்லி: நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்கள் அன்னிய முதலீட்டாளர்களை வெகுவாக கவர்ந்து, இதனால் கடந்த ஒரு வருட ஆட்சியில் சுமார் 2.5 லட்சம் கோடி ரூபாயை அன்னிய முதலீடு இந்திய சந்தையில் முதலீடு செய்துள்ளனர்.
கடன் மற்றும் பங்குச் சந்தை
சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அளித்த தகவலின் படி திங்கட்கிழமையுடன் முடிவடைந்த ஒரு வருட மோடி ஆட்சியில் கடன் சந்தையில் 1,58,165 கோடி ரூபாயும், பங்குச் சந்தையில் 93,636 கோடி ரூபாயும் அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.
ஐஎம்எப், உலக வங்கி
இன்றளவு இந்திய சந்தை மிகவும் வளர்ச்சி மிக்க சந்தையாக சர்வதேச சந்தையில் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஐஎம்எப், உலக வங்கி ஆகியவை இந்திய சந்தையின் வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம்
மேலும் அமெரிக்க பெடரல் அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்ந்து முடிவைக் கைவிட்டால், இந்திய சந்தையில் அன்னிய முதலீடு 2 முதல் 3 மடங்கு வரை உயரும்.
இதற்கு சாதகமாக ஐரோப்பிய சந்தையும் பொருளாதார வளர்ச்சியில் மந்தமாக உள்ளது.
மேட் வரி
மே மாத்தில் அன்னிய முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட மேட் வரி பிரச்சனையின் காரணமாக இந்திய சந்தையில் 14,000 கோடி ரூபாய் அன்னிய முதலீடு குறைந்தது.
பங்குச் சந்தை
அன்னிய முதலீட்டின் காரணமாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரை உயர்ந்தது என செபி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?



Click it and Unblock the Notifications