பெங்களூரு: உலகின் மிகப்பெரிய நெட்வொர்கிங் நிறுவனமான சிஸ்கோ, மத்திய அரசின் 20 ஸ்மார்ட் சிட்டி உருவாக்கும் திட்டத்தில் இணைந்திட சில முக்கிய மாநில அரசுகளுடன் போச்சுவார்த்தை நடத்தியது.
இதன்படி சிஸ்கோ நிறுவனம் மும்பை, புனே, ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ ஆகிய ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு அமைக்கும் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் துவக்கம்..
மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஜூன் மாதம் முதல் ஸ்மார்ட் சிட்டி, அனைவருக்கும் வீடு மற்றும் urban rejuvenation திட்டங்களைச் செயல்படுத்தப் போவதாக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சிஸ்கோ என்ன செய்யப் போகிறது...
இந்த நான்கு மாநிலங்களிலும் சிஸ்கோ நிறுவனம் ஸ்மார்ட் தெரு விளக்குகள், போக்குவரத்து மேம்பாடு, சிசிடிவி பாதுகாப்பு மற்றும் தண்ணீர் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
அமித் பதின்ஸ்
இதுகுறித்துச் சிஸ்கோ நிறுவனத்தின் இந்திய கிளை தலைவர் அமித் பதின்ஸ் கூறுகையில், இந்த நான்கு திட்டத்தில் மும்பை நகரில் கண்காணிப்புத் தளத்தை மேம்படுத்த காவல்துறைக்கு ஐபி சிட்டி கண்காணிப்பு முறையைச் செயல்படுத்த உள்ளோம் என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் காவல் துறை இந்தப் புதிய ஸ்மாட் சிட்டியில் ஒவ்வொரு அசைவும் தெளிவாகக் கண்காணிக்க முடியும்.
50 பில்லியன் டாலர் வர்த்தகம்
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்தியாவில் 20 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தின் மூலம் நாட்டில் புதிதாக 45 - 50 பில்லியன் டாலர் வர்த்தகம் உருவாக உள்ளதாக அவுட்லுக் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் இந்தியா
சிஸ்கோ நிறுவனம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் இணைந்தது மட்டும் அல்லாமல், டிஜிட்டல் இந்தியா திட்டத்திலும் இணைய உள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சிஸ்கோ மட்டும் அல்லாமல், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் எனப் பல நிறுவனங்கள் போட்டிப்போட தயார் நிலையில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications