சென்னை: இந்திய சந்தையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட்களுக்குத் தனி இடம் உண்டு. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் உட்படுத்தி வரும் புதுமைகள் வாடிக்கையாளர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக மே மாதத்தில் இந்நிறுவனத்தத்தின் விற்பனை அமக்களமாக இருந்தது.
மே மாத விற்பனை அமோகம்..
மே மாதத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் விற்பனை 41.35 சதவீதம் அதிகரித்துள்ளது சுமார் 35,354 வாகனங்கள் விற்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 25,010 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கத்து.
ஏற்றுமதி
இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்குச் செல்கிறது நாம் அறிந்த ஒன்று. கடந்த சில நாட்களாக இந்நிறுவனத்தின் விற்பனை வெளிநாட்டுச் சந்தைகளிலும் சிற்பாக உள்ளது.
இந்திய சந்தை
இந்நிலையில் இந்திய சந்தையில் இதன் விற்பனை 41.23 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே இம்மாதத்தில் மட்டும் சுமார் 739 வாகனங்களை ராயல் என்ஃபீல்டு ஏற்றுமதி செய்துள்ளது.
கார் விற்பனை
இதேகாலகட்டத்தில் இந்தியாவில் கார் விற்பனை குறிப்பிடத்தக்க அளவிலான உயர்வைப் பெற்றுள்ளது. இந்த வகையில் விற்பனை தகவல்களை வெளியிட்டுள்ள ஹூண்டாய், டொயோட்டா, மாருதி சூசுகி நிறுவனங்களின் நிலையைப் பார்ப்போம்.
ஹூண்டாய்
மே மாத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை 1.5 சதவீதம் வரை உயர்ந்து 52,515 கார்களை விற்பனை செய்துள்ளது.
டொயோட்டா
இந்தியாவில் கிர்லோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் டொயோட்டா மே மாதத்தில் விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது. இதன் படி இந்நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை 12,965 ஆக உள்ளது.
மாருதி சூசுகி
இதே காலகட்டத்தில் மாருதி சூசுகி நிறுவனத்தின் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது.