ஜெனிவா:இந்தியாவிற்கு அமெரிக்கா ஏற்றுமதி செய்யப்படும் இறைச்சிகள் சர்வதேச வர்த்தகத் தரத்திற்கு இணையாக இல்லை என இந்திய அரசு உலக வர்த்தக அமைப்பில் (WTO) வழக்குத் தொடுத்தது. இதனால் இந்தியாவில் அமெரிக்க இறைச்சிகளுக்கு இந்திய அரசு தடைவித்தது.
இவ்வழக்கு விசாரணையில் இந்திய அரசு விதித்த தடை நியாமானது இல்லை என உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
18 மாதங்கள்
உலக வர்த்தக அமைப்பின் இந்த அறிவிப்பின் பெயரில் இந்திய அரசு அடுத்த 12 - 18 மாதங்கள் வரையிலான காலத்தில் தடையை நீக்கி அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றமதி செய்ய வழிவகைச் செய்து தர வேண்டும்.
உலக வர்த்தக அமைப்பு
இவ்வழக்கை விசாரித்த மேல்முறையீட்டுக் குழு, அமெரிக்காவின் இறைச்சி ஏற்றுமதியில் இந்திய அரசு செய்த AI சோதனை தேவையற்றது, அவை ஆபத்து விளைவிக்கக் கூடியது இல்லை எனவும் இக்குழு தெரிவித்துள்ளது.
இதனால் தடையை நீக்கும் நிர்பந்தத்தில் உள்ளது இந்தியா.
இந்தியா
அமெரிக்காவிற்கு இறைச்சி ஏற்றுமதியில் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்று. ஏனெனில் இந்தியாவில் இறைச்சி உட்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய விதித்துள்ள தடையைக் கண்டிப்பாக உடைக்க வேண்டும் என அமெரிக்கத் துரிதாமாகச் செயல்பட்டுள்ளது.
ஏற்றுமதி
2014ஆம் ஆண்டில் அமெரிக்கா இந்தியாவிற்குச் சுமார் 3.72 மில்லியன் டன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. 2013ஆம் ஆண்டில் இதன் அளவு 3.45 மில்லியன் டன் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications