டாக்கா: வங்களத்திற்குப் பிரதமர் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 3 பில்லியன் டாலர் முதலீட்டில் மின் உற்பத்தி நிலையைத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மோடியின் நெருங்கிய நன்பரான கெளதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழமம் இங்கு 2 பில்லியன் டாலர் செலவில் மற்றொரு மின்சார உற்பத்தி தளைத்தையும் நிறுவ உள்ளது.
சனிக்கிழமை ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வங்களத்தில் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையம் மற்றும் எல்என்ஜி இறக்குமதி முனையத்தை நிறுவும் திட்டத்திற்கான 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அனில் அம்பானி கையெழுத்திட்டார்.
பிரதமரின் இச்சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளும் குறைந்தது 20 ஒப்பந்தம் மற்றும் திட்டங்களில் இணைய உள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.