ஈ-விசா திட்டத்தால் வெளிநாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 7 மடங்கு உயர்வு!

டெல்லி: இந்தியாவில் ஈவிசா திட்ட அறிமுகத்தால் மே மாதத்தில் சுமார் 76 நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 750 சதவீதம் உயர்ந்துள்ளது.

2015ஆம் ஆண்டில் மே மாத்தில் இந்தியாவிற்கு 15,659 பயணிகள் வந்துள்ளனர், கடந்த வருடம் இதன் எண்ணிக்கை 1,833 ஆக இருந்தது குறிப்பிடதக்கது.

ஈ-விசா திட்டம்

ஈ-விசா திட்டம்

சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்குவதில் செய்யப்பட்டுள்ள தளர்வுகளின் மூலம் இந்தியாவிற்கு வெளிநாட்டுப் பயணிகள் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நவம்பர் 2014ஆம் ஆண்டு இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது குறிப்பிடதக்கது.

74 நாடுகள்

74 நாடுகள்


இத்திட்டத்தின் மூலம் 43 நாடுகளுக்கு மிகவும் எளிமையாக விசா பெற முடியும். கடந்த மே மாதம் மேலும் 32 நாடுகளுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

முக்கிய நாடுகள்

முக்கிய நாடுகள்

இந்தியாவிற்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் அளவு அமெரிக்கவில் அதிகமாக இருக்கிறது. இதன் படி அமெரிக்காவில் இருந்து 37.82%, ஜெர்மனியில் இருந்து 9.35%, ஆஸ்திரேலியாவில் இருந்து 8.95% பயணிகள் இந்தியா வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ரஷ்யா, கொரியா, ஐக்கிய அரபு நாடுகள், மெக்சிகோ, உக்ரைன், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றுஶள்ளது.

 

இந்தியாவில் டெல்லி தான் டாப்

இந்தியாவில் டெல்லி தான் டாப்

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ள பயணிகள் அதகமானோர் டெல்லியை சுற்றிப்பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து மும்பை, பெங்களூரு, சென்னை ஆகியவை இடம்பெற்றுள்ளது.

1 இலட்சம் பயணிகள்

1 இலட்சம் பயணிகள்

2015ஆம் ஆண்டில் ஜனவரி - மே மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவிற்குச் சுமார் 1,10,657 வெளிநாட்டுப் பயணிகள் வந்துள்ளனர். கடந்த வருடம் இதன் அளவு 9,841 மட்டுமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+