டெல்லி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சரிவு பாதையில் இருந்து லாபகரமான நிலைக்குக் கொண்டு வந்த அஜய் சிங், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற நிறுவனத்தில் விமான எண்ணிக்கையை உயர்த்தும் திட்டத்தில் இறங்கியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் சுமார் 800 கோடி ரூபாய் முதலீடாகக் கொண்டு சேர்த்துள்ளார் அஜய் சிங்.
வாடிக்கையாளர் அதிகரிப்பு
அஜய் சிங் தலைமையிலான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் புதிய திட்டமுறைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இத்தருணத்தில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் தொடர்ந்து பயணிகள் சேவையைத் திறம்பட அளிக்க முடியும் என ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அஜய் சிங்
சில மாதங்களுக்கு முன்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூடும் நிலையில் இருந்து, ஆனால் தற்போது அடுத்ததடுத்த திட்ட நடவடிக்கை மற்றும் முதலீட்டின் மூலம் இந்நிறுவனம் சிறப்பாகச் செயல்படத் துவங்கி வாடிக்கையாளர் நம்பிக்கையைக் கைப்பற்றியுள்ளோம் என அஜய் சிங் தெரிவித்தார்.
800 கோடி முதலீடு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கலாநிதி மாறனிடம் இருந்து நிர்வாகப் பொறுப்புகள் அஜய் சிங்கிற்குக் கைமாறிய பிறகு சுமார் 800 கோடி ரூபாய் முதலீடாகக் குவிந்துள்ளது.
இந்த முதலீட்டு அளவை 1500 கோடி ரூபாய் வரை உயர்த்தப்படும் எனவு அஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விரிவாக்கம்
7 காலாண்டுகளுக்குப் பின்பு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தற்போது லாபகரமாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் விமானங்கள் எண்ணிக்கையை உயர்த்த அஜய் சிங் திட்டமிட்டுள்ளார்.
7 விமானங்கள்
2015-16ஆம் ஆண்டுக்குள் நிறுவனத்தில் புதிதாக 6 முதல் 7 விமானங்களை இணைக்கப்பட உள்ளதாகவும் அஜய் சிங் தெரிவித்தார்.
பங்குச்சந்தை
இந்த அறிவிப்பின் மூலம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று 3.58 சதவீதம் அதிகரித்து 18.80 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications