பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்.சந்திரசேகரனின் சம்பளம் 21.28 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் சக போட்டியாளரான இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் விஷால் சிக்காவின் சம்பளம் 30 கோடி ரூபாய். இந்திய ஐடி நிறுவனங்களிலேயே அதிகச் சம்பளம் வாங்குவது விஷால் சிக்கா என்பது தான்.
விஷால் சிக்கா முன்
இந்திய ஐடித்துறையில் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன் சந்திரசேகரன் தான் அதிகச் சம்பளம் வாங்கும் சிஇஓவாக இருந்தார். பல வருடங்களாக முதல் இடத்தைச் சுவைத்து வந்த டிசிஎஸ் சந்திரசேகரன் தற்போது இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
21 கோடி ரூபாய் சம்பளம்
டாடா குழுமத்தில் அதிக லாபம் தரும் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் வருடத்திற்கு 1.79 கோடி ரூபாய் சம்பளமும், 2.62 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும், 86 லட்ச ரூபாய் பிற சலுகைத் தொகையும், நிறுவன லாபத்தில் 16 கோடி ரூபாய் ஆகியவற்றை இணைத்து 21.28 கோடி ரூபாயை 2015ஆம் ஆண்டிக்கான வருமானமாகப் பெற உள்ளார்.
18 சதவீத உயர்வு
எப்போது இல்லாத அளவிற்குச் சந்திரசேகரன் அவர்களின் சம்பளம் இந்த வருடம் 18 சதவீதம் அதிகரித்துள்ளது.
ராஜேஷ் கோபி
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான ராஜேஷ் கோபி சுமார் 2.14 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்றார்.
விப்ரோ
நாட்டின் முன்றாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் சீஇஓ டி.கே.குரியன், இவ்வருடம் 32 சதவீத ஊதிய உயர்வு பெற்றாலும், சந்திரசேகரன் அவர்களின் பாதி வருமானத்தை மட்டும் பெறுகிறார்.
சிடிஎஸ்
இந்நிலையில் சிடிஎஸ் நிறுவனத்தின் தலைவரான பிராசிஸ் டிசோசா அவர்கள் வருடத்திற்கு 11 மில்லியன் டாலரை வருமானமாகப் பெறுகிறார்.