டெல்லி: அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமம் பிப்பாவ் ஷிப்யார்டு நிறுவனத்தின் பெருவாரியான பங்குகளைக் கைபற்றிப் பாதுகாப்புத் துறையில் ஸ்திரமாகக் கால் தடம்பதித்ததுள்ளது.
இந்நிலையில் பாதுகாப்புத் துறையில் போர்க்கப்பல் முதல் போர்காலத்தில் பயன்படுத்தப்படும் விமானம் வரை அனைத்தையும் தயாரிக்க அனில் அம்பானி திட்டமிட்டுள்ளார்.
இதன் படி மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் பாதுகாப்புத் துறை சார்ந்த அன்னிய முதலீடுகளைக் கவர சுமார் 11 நிறுவனங்களைத் திறப்பதற்கான உரிமத்தை பெற அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட்
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் நிறுவனம் திறக்க உள்ள 11 நிறுவனங்களும் துவக்க காலத்தில் குறைந்தது 10,000 கோடி ரூபாய் வர்த்தகத்தைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைப்பு
இந்த 11 நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைத்துச் செயல்பட உள்ளதால் அன்னிய முதலீட்டின் அளவு சரி பாதியாக இருக்கும் எனவும், பாதுகாப்புத் துறை சார்ந்த உபகரணங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அடுத்தச் சில மாதங்களில் கணிசமான அளவில் உயரும் எனச் சந்தை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
13 நிறுவனம்
இந்தியாவில் கப்பல் கட்டுமானம், ஹெலிக்காப்டர் மற்றும் ராணுவ பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கான 13 உரிமங்களை 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் பெற உள்ளதாக ரிலையன்ஸ் டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவன தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.
உற்பத்தி
ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த 11 நிறுவனங்களுக்கான உரிமத்தை பெறும்பட்சத்தில் இந்நிறுவனம் லேண்டு சிஸ்டம்ஸ், land systems, unmanned aviation, defence electronics, நிர்முழ்கி கப்பல்கள் கட்டுமானம், ஏவுகணைகள் உற்பத்தி மற்றும் development of engines ஆகியவற்றின் உற்பத்தியில் முழுமையாக இறங்கும்.


Click it and Unblock the Notifications