டெல்லி: ஜூன் மாதம் ஆசிய சந்தையில் நிலவிய மந்த நிலை, கார்பரேட் நிறுவனங்களின் குறைவான லாப அளவு, மாட் வரி விவகாரம் ஆகிய காரணங்களால் இந்திய சந்தை சுமார் 4,700 கோடி ரூபாய் அன்னிய முதலீடு இழந்துள்ளது.
இக்காலகட்டத்தில் பங்குச்சந்தையை விடவும், கடன் சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீட்டை இந்திய சந்தை இழந்தது பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவாகும்.
ஜூன் மாதம்
இம்மாதத்தில் பங்குச் சந்தையில் இருந்து 1,310 கோடி ரூபாயும், கடன் சந்தையில் இருந்து 3,431 கோடி ரூபாயும் மொத்த 4,741 கோடி ரூபாய் இழப்பை இந்திய சந்தை சந்தித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாட் வரிப் பிரச்சனை
இந்திய சந்தையில் மாட் வரி பிரச்சனைகளால் இந்திய சந்தையில் செய்யப்பட்ட முதலீடுகள் அனைத்தும் சீனாவிற்கு இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இக்காலகட்டத்தில் சீனாவில் சில திட்டமுக்கிய திட்டங்களால் அதிகப்படியான முதலீட்டைக் கவர்ந்தது.
94,000 கோடி ரூபாய் முதலீடு
ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையில் இந்திய சந்தையில் சுமார் 94,241 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
சீனா மற்றும் இந்தியா
ஐரோப்பிய சந்தை பொருளாதாரப் பிரச்சனைகளால் மந்தமாகச் செயல்பட்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் இந்திய மற்றும் சீன சந்தைகளில் முதலீடு செய்து வருகிறது.
மேலும் சீனாவில் உள்கட்டுமானம் மற்றும் நிதிநிலை மோசமாக உள்ளதால், முதலீடுகள் அனைத்தும் இந்திய சந்தையை நோக்கியுள்ளது. கடந்த மாதம் மாட் வரிப் பிரச்சனைகள் காரணமாக மட்டும் இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் குறைந்தது.