மும்பை: நாட்டில் மின்சார உற்பத்தியை மேம்படுத்து மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதில் மோடியின் கனவாக விளங்குவது சூரிய மின்சார உற்பத்தி தான்.
இந்தியாவின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத்தின் தலைவர் கொளதம் அதானி, 10,000 மெகா வாட் மின்சார உற்பத்தி திறன் கொண்டு சோலார் பிளான்ட் தளத்தை ராஜஸ்தான் மாநில அரசுடன் இணைத்து அமைக்க உள்ளார்.
அதானி குழுமம்
இந்குழுமத்தின் கிளைகளில் ஒன்றான Adani Renewable Energy Park நிறுவனமும் ராஜஸ்தான் மாநில அரசும் இணைந்து 50 -50 என்ற முதலீட்டு அளவில் இப்புதிய சோலார் பிளான்டை அமைக்க உள்ளனர். இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திட்டுள்ளது.
மேலும் இத்திட்டப் பணிகள் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
முதலீடு
இத்திளத்தை அமைக்கச் சுமார் 60,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என Adani Renewable Energy Park நிறுவனம் தெரிவித்துள்ளது. இத்தொகை சோலார் பேனல் தயாரிப்பு, உதிரிபாகங்கள், உற்பத்தி தளம் அமைக்க ஆகிய அனைத்தும் இதில் அடங்கும்
5,000 மெகா வாட்
இதில் இருந்து கிடைக்கப்பெறும் 5,000 மெகா வாட் அதானி குழுமம் பயன்படுத்திக்கொள்ளும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு
இத்தளத்தை அமைப்பதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
மத்திய அரசின் இலக்கு
2022ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1,00,000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட சோலார் தளங்களை அமைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து நாட்டின் 500 மெகாவாட் திறன் கொண்ட 25 சோலார் தளைங்களை அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அதானி பவர்
இந்தியாவில் அனல் மின் உற்பத்தியில் சிறந்து விளங்குவது அதானி பவர் நிறுவனம் தான், இந்நிறுவனம் சுமார் 10,480 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அதுமட்டும் அல்லாமல் நிலக்கரி மூலம் 40 மெகாவாட் மின்சாரத்தையும் உற்பத்தி செய்து வருகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications