டெல்லி: மே மாதத்தில் இந்திய பொருளாதாரம் மிகவும் மந்தமாக இருந்ததால் நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதனால் கடந்த மே மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு 22.34 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இதேகாலகட்டத்தில் இதன் அளவு 27.99 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் இறக்குமதியிலும் சுமார் 16.52 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. மே மாதத்தில் இந்தியாவில் 32.75 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவு 10.41 பில்லியன் டாலர் அளவு உயர்ந்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.