நியூயார்க்: கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நிறுவனம், குளோபல் வெல்த் 2015 என்ற தலைப்பில் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் 'அல்ட்ரா ஹய்' பணக்காரர்கள் அதிகம் கொண்டு நாடுகள் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
அது என்ன அல்ட்ரா ஹய் பணக்காரர்கள்?
100 மில்லியன் டாலருக்கு (சுமார் 630 கோடி ரூபாய்) அதிகமாகச் சொத்துகளை வைத்துள்ளவர்கள் அல்ட்ரா ஹய் பணக்காரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். அதாவது மிகப் பெரும் பணக்காரர்கள்.
இந்தியா 4வது இடம்
பாஸ்டன் கன்சல்டிங் குரூப் நடத்திய ஆய்வில் இந்தியா 928 அல்ட்ரா ஹய் பணக்காரர்கள் கொண்டு இப்பிட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கம் போல் இந்த வருடமும் இப்பிட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தைப் படித்துள்ளது.
இந்தியா மற்றும் சீனா
உலக நாடுகள் மத்தியில் வேகமாக வளர்ந்து வரும் சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியில் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளன.
இவற்றில் சீனா அமெரிக்காவிற்கு போட்டியாகவும், இந்தியா சீனாவிற்குப் போட்டியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டாப் 5 நாடுகள்
இந்நிலையில் இப்பட்டியலில் டாப் 5 இடங்களைப் பிடித்துள்ள நாடுகளை இப்போது பார்ப்போம். 2014ஆம் ஆண்டின் நிலையை வைத்து பாஸ்டன் கன்சல்டிங் குரூப் இந்த ஆய்வை மேற்கொண்டது, இதில் அமெரிக்கா 5,201 அல்ட்ரா ஹய் பணக்காரர்களைக் கொண்டு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து சீனா (1,037), பிரட்டன் (1,019), இந்தியா (928) மற்றும் ஜெர்மனி (679) ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இந்தியா
கடந்த வருடம் இந்தியாவில் இதன் எண்ணிக்கை வெறும் 284 மட்டுமே, ஆனால் இந்த வருடம் இதன் அளவு 928 ஆக உயர்ந்துள்ளது.
ஆசிய பசிபிக் பகுதி
2014ஆம் ஆண்டு ஆய்வின் படி ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள அல்ட்ரா ஹய் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 47 டிரில்லியன் டாலராகும். 2016ஆம் ஆண்டில் இதன் அளவு 57 டிரில்லியன் டாலராக உயரும் எனப் பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications