பாரீஸ்: உலகின் முன்னணி பயணிகள் விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்திற்கு, உதிரிபாகங்களைத் தயாரிக்கும் மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தைப் பாரீஸ் ஏர் ஷோவில் மஹிந்திரா குரூப் கைப்பற்றியுள்ளது.
இது மேக் இன் இந்தியா திட்டத்தில் ஒரு மைல்கள் எனக் குறிப்பிடால் மிகையாகாது.
பெங்களூரில் உற்பத்தி
இத்திட்ட மதிப்பு பற்றிய தகவல்களைத் தெரிவிக்க மஹிந்திரா குழுமம் மறுத்துவிட்டது. ஆயினும் ஏர்பஸ் நிறுவனத்திக்குச் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் பெங்களூர் அருகில் நார்சபுரா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மஹிந்திரா ஏரோஸ்டக்சர்ஸ் தளத்தில் உற்பத்தி செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஜெர்மனிக்கு ஏற்றுமதி
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை வருடாந்திர அடிப்படையில் ஜெர்மனியில் உள்ள இந்நிறுவனக் கிளைக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு
ஏர்பஸ் நிறுவனத்தின் உற்பத்தி திட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்நிறுவனத்தில் உற்பத்தி மற்றும் வடிவமைப்புத் துறையில் பல ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.
ஆனந்த் மஹிந்திரா
இதுகுறித்து மஹிந்திரா குழுமமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா கூறுகையில், இத்தகையைப் பெரும் திட்டத்தைப் பெற நீண்ட திட்டமுறைகள் மற்றும் தகுதிகள் தேவைப்படுகிறது. இந்த உற்பத்தைத் திட்டத்தைக் கைப்பற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேக் இன் இந்தியா
மேலும் ஏர்பஸ் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் திட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய நிறுவனங்களுக்குப் புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. அதுமட்டும் அல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்திய உற்பத்தி பொருட்களின் மீதான நம்பிக்கை உயரும்.
மஹிந்திரா
மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 16.98 பில்லியன் டாலராகும். மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் உலகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications