டெல்லி: இந்தியாவிற்கான கடன் அளவை 50 சதவீதம் உயர்த்தி 12 பில்லியன் டாலர் வரை கடன் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தேகிஹிகோ நகோ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் முதலீடு செய்யவும், நிதியுதவி அளிக்கவும் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. இப்பட்டியலில் தற்போது சர்வதேச நிதி நிறுவனங்களும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன் அளவு
ஆசிய வளர்ச்சி வங்கியின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, இந்தியாவிற்கு ஆசிய வங்கி 2015-2017ஆம் ஆண்டுக் காலத்தில் 7 - 9 பில்லியன் டாலர் வரை கடன் அளிப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால் தேகிஹிகோ அறிவிப்பின் படி இக்கடன் அளவை 12 பில்லியன் டாலர் வரை உயர்த்துவதாக ஆசிய வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது.
சந்திப்பு
செவ்வாய்க்கிழமை காலை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயடு அவர்களைத் தேகிஹிகோ சந்தித்த பின்பு இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
20 பில்லியன் டாலர்
மேலும் அவர், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதிநிலையை ஆய்வு செய்த பிறகு கடன் அளவு 20 பில்லியன் டாலர் வரை உயர்த்தவும் தான் தயாராக உள்ளதாகத் தேகிஹிகோ குறிப்பிட்டார்.
சீனா - இந்தியா
இந்தியாவின் வளர்ச்சிக்குறித்துச் செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, இந்தியாவில் புதிய வளர்ச்சி கணக்கை ஒப்பிடும் போது வளர்ச்சி மிகுந்த சீனா பின்தங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் இந்திய சரியான பாதையில் செல்வதால் கூடிய விரைவில் பொருளாதார நாடுகள் பட்டியலில் சீனாவின் இடத்தை இந்தியா பிடித்துவிடும் என அவர் தெரிவித்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்புகள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி செய்த ஆய்வில், 2015-16ஆம் ஆண்டில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியும், 2016-17ஆம் ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டும் எனத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications