பெங்களூரு: ஞாயற்றுக்கிழமை நடந்த சர்வதேச யோகா தினத்தில் இந்தியாவில் யோகா கலை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து.
டெல்லி ராத்பாத் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களோடு மக்களாக யோகா செய்தது ஆச்சரியத்தை அளித்தார். சுமார் அரை மணிநேரத்தில் 15 ஆசனங்களைச் செய்தார் அசத்தினார் மோடி.
இன்றைய தினத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் சிறப்பான முறையில் கல்லா கட்டியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிளிப்கார்ட்
இன்றைய தினத்தில் யோகா மேட்டிற்கான தேவை சுமார் 80 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் Gravolite, Aerolite, Lnt & Misr ஆகிய பிரான்ட் நிறுவன யோகா மேட்கள் சுமார் 1,400 வரை விற்பனையாகியுள்ளது எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
வெண்ணிலா மேடுகள்
மேலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெண்ணிலா மேடுகளை விரும்புகிறார்கள், அதைத் தவிர நாற்றம் அற்ற, தண்ணிர் எதிர்ப்புத் தன்மை, அதிர்வுகளைத் தாங்கக்கூடிய மேட்டுகளை வாங்கியுள்ளார்கள்.
யுத் வாடிக்கையாளர்கள்
அதுமட்டும் அல்லாமல் 30 வயதிற்குக் குறைவாக வாடிக்கையாளர்கள் கலர் மற்றும் யோகா புகைப்படங்களைக் கொண்ட மேட்டுகளை விரும்பி வாங்கினர்.
ஷில்பா ஷெட்டி
மேலும் ஷில்பா ஷெட்டி செய்த யோகா டிவிடிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. அதிலும் தமிழ் பதிவு அதிகளவில் விற்பனை செய்யப்பட்டதாகப் பிளிப்கார்ட் நிறுவனம் கூறியது.
அதேபோல் பிரசவ காலத்திலும், பிரசவத்திற்குப் பின் செய்யவேண்டி யோகா டிவிடிகள் அதிகளவில் விற்கப்பட்டுள்ளது.
புத்தகங்கள்
இன்றைய தினத்தில் யோகா மேட்டுகள், டிவிடிகள் மட்டும் அல்லாமல், யோகா கலை சம்பந்தமான புத்தகங்களும் அதிகளவில் விற்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சத்யநந்த சரஸ்வதி எழுதிய ஆசனா பிரானயாமா முத்ரா பந்தா புத்தகம் எதிர்பராத அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஹெல்த் மற்றும் லைப்ஸ்டைல்
ஞாயற்றுக்கிழமை வர்த்தகத்தில் யோகா தின தாக்கத்தால் ஹெல்த் மற்றும் லைப்ஸ்டைல் பிரிவில் விற்பனை சிறப்பாக இருந்தது.
வாடிக்கையாளர்கள்
ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் நிறுவனத்தில் சுமார் 45 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களின் செயல்பாட்டை வைத்தே பிளிப்கார்ட் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.