டெல்லி: இந்தியாவில் பருவமழை துவங்கியுள்ளதால் வெங்கயாத்தின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைக் குறைக்க மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு புதிய விலையை நிர்ணயம் செய்துள்ளது வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம்.
இதன்படி எற்றுமதி செய்யப்படும் ஒரு டன் வெங்காயத்தின் விலையை 250 டாலரில் இருந்து 175 டாலர் உயர்த்தி, 425 அமெரிக்க டாலராக விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த விலை உயர்வினால் வெங்காய ஏற்றுமதியின் அளவு கணிசமாகக் குறையும் எனவும், உள்நாட்டில் வெங்காயத் தட்டுப்பாட்டைக் குறைக்கும் எனத் தெரிகிறது.
இப்புதிய எற்றுமதி விலையை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவித்துள்ளது. மேலும் கடந்த 3 மாதத்தில் மொத்த விலை விற்பனையில் வெங்காயத்தின் விலை சுமார் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இப்பருவ காலத்தில் இந்தியாவில் வெங்காய உற்பத்தின் அளவு 20 சதவீதம் வரை குறையும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வெங்காய ஏற்றுமதியைக் குறைக்கவில்லை என்றால் உள்நாட்டில் வெங்காயத் தட்டுப்பாட்டின் மூலம் இதன் விலை 50 சதவீதம் வரை அதிகரிக்கும் என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.