டெல்லி: ஆன்லைன் வருமான வரி தாக்கல் முறையை எளிமையாக்க மத்திய வருமான வரித்துறை தற்போது ஒன் டைம் பாஸ்வோர்டு எனப்படும் ஓடிபி எண்ணை வாடிக்கையாளருக்கு அளிக்கிறது.
இந்த ஓடிபி எண் உங்கள் கணக்கின் விபரங்களை ஆதார் எண் விபரங்களுடன் சரிபார்த்த பின் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
ஒப்புகை படிவம்
இணையதளம் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் வாடிக்கையாளர் தங்களின் ஒப்புகை படிவத்தை வருமான வரித்துறை தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டியுள்ளது. இதனால் பலர் தங்களது ஒப்புகை படிவத்தை வருமான வரித்துறைக்கு அனுப்பிவைக்க மறந்துவிடுகின்றனர்.
புதிய முறை..
தற்போது உள்ள முறையை மேம்படுத்தும் நோக்கத்துடனும், எளிமையாக்க வேண்டும் என்று வருமான வரித்துறை புதிய முறையை வடிவமைத்துள்ளது.
விபரங்கள்
இணையதளத்தில் உங்களின் வரி சம்பந்தமான அனைத்து விபரங்களையும் நிரப்பிய பின் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் உங்களுக்கு ஓடிபி பாஸ்வோர்டு கிடைக்கும்.
ஆதார் டேட்டாபேஸ்
உங்களின் விபரங்களை இணையதளத்தில் சமர்ப்பித்த பின் வருமான வரித்துறை அடுத்த 24 மணிநேரத்தில் ஆதார் டேட்டாபேஸில் பதிவாகியுள்ள உங்களின் தகவல்களை இணையம் மூலமாகவே சரிபார்க்க துவங்கும்.
இப்பணி நிறைவடைந்த உடன் நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணுக்கு வருமான வரித்துறை, ஒன் டைம் பாஸ்வோர்டு அனுப்பி வைக்கும்.
இறுதிக்கட்ட பணிகள்
இதனைக்கொண்டு நீங்கள் வருமான வரித்தாக்கலின் இறுதிக்கட்ட பணிகளை முடிக்க வேண்டும்.
இந்த ஒன் டைம் பாஸ்வோர்டு 24 மணிநேரம் மட்டுமே இயக்கத்தில் இருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
தபால் முறை தேவையில்லை
இதன் மூலம் உங்கள் ஒப்புகை படிவத்தைத் தபால் மூலம் வருமான வரித்துறைக்கும் அனுப்ப தேவையில்லை. மேலும் உங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்யக் கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதியாகும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications