சென்னை: ஐரோப்பிய சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கிரீஸ் நாட்டின் பொருளாதார நிலைப்பாட்டைக் குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இந்நிலையில் கிரீஸ் நிலைப்பாடு ஆசிய சந்தையைப் பாதிக்குமே தவிர இந்திய சந்தையை நேரடியாகப் பாதிக்காது என இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமாணியம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரவிந்த் சுப்ரமாணியம்
அரவிந்த் சுப்ரமாணியம் அவர்களின் அறிவிப்பின் மூலம் முதலீட்டாளர்களுக்கு இந்திய சந்தையின் மீது நம்பிக்கை அதிகரித்தது.
தற்போது இந்திய சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவுகள் அனைத்தும் ஆசிய சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைப் பொருத்தே அமைந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜீவ் மெஹ்ரிஷி
இதன் மூலம் இந்தியாவில் இருந்து அன்னிய முதலீடுகள் கணிசமாக வெளியேறவும் வாய்ப்புள்ளதாக நிதித்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி தெரிவித்தார். இதனைத் தடுக்கும் பொருட்டு ரிசர்வ் வங்கி சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சந்தா கோச்சார்
இதுகுறித்து இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார், "ஐசிஐசிஐ வங்கி ஐரோப்பிய சந்தையில் அதிகளவிலான வெளிப்பாடு இல்லை என்பதால் கிரீஸ் நிலைப்பாடு வங்கியைப் பாதிக்காது. மேலும் இவை இந்தியை சந்தையும் பாதுக்காது." என வங்கி வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேசினார்.
உலகப் பொருளாதாரம்
அடுத்த வாரம் நடைபெற உள்ள பொது வாக்கெடுப்பில் கிரீஸ், ஐரோப்பிய கூட்டணியில் இருந்து விலகுவது குறித்த முடிவுகள் எடுக்கப்படும்.
கிரீஸ் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியில் வெளியேறினால் ஐரோப்பிய சந்தையில் மட்டும் அல்லாமல் உலகப் பொருளாதாரத்திலும் குறிப்பிடும்படியான மாற்றங்கள் ஏற்படும்.