டெல்லி: ஆசியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் 100 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாகும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) இந்தியா மற்றும் 49 ஆசிய நாடுகள் இணைந்துள்ளது.
சீனா தலைமை வகிக்கும் இவ்வங்கியின் 60 பாகங்கள் கொண்ட முழு உள்கட்டமைப்பு திட்ட ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 50 நாடுகளும் திங்கட்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கையெழுத்திட்டது.
இதற்காகப் பெய்ஜிங் நகரில் கிரேட் ஹால் ஆஃ பீப்பல் அரங்களில் நடந்த முக்கிய நிகழ்ச்சியில் 50 நாட்டுளின் பிரதிநிதிகளும் திங்கட்கிழமை கலந்துகொண்டனர்.
மேலும் 7 நாடுகள் 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் கையெழுத்திடும் எனத் தெரிகிறது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூலம் இந்தியாவில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகக் கணிசமான நிதியுதவியும் மேம்பட்ட திட்ட வடிவமும் கிடைக்கும்.
சமீபத்தில் பிரிக்ஸ் நாடுகள் கூட்டணியில் பிரிக்ஸ் வங்கி சீனாவில் துவங்கப்பட்டது. இப்புதிய வங்கிக்கு கே.வி.காமத் தலைமை வகுக்கிறார்.