பெங்களூரு: புதன்கிழமை (ஜூலை 1) டிஜிட்டல் இந்தியா திட்டம் இன்று துவங்கியதை அடுத்து சந்தையின் முன்னணி நிறுவனங்கள் இத்துறையில் வாய்ப்புகளைக் கைபெற்ற ஆயத்தம் ஆகி வருகிறனர்.
இதன் ஒரு பகுதியாக டிசிஎஸ் நிறுவனத்தின் 1 லட்ச ஊழியர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கை 3 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
என். சந்திரசேகரன்
இந்தியாவில் புதிய பாதை ஒன்று உருவாகியுள்ளது, மேலும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் மிகப்பெரிய பங்கு வகிக்க உள்ளது. இத்துறையில் உள்ள வர்த்தகத்தை அடைய நிறுவனம் 1 பணியாளர்களுக்கு இத்துறை தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம் என டிசிஎஸ் நிறுவன தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்தார்.
வருடாந்திர பொதுக்கூட்டம்
இந்நிறுவனத்தின் 20வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன், "டிசிஎஸ் நிர்வாகம் டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்து இத்துறையில் சிறப்பான வளர்ச்சியைக் காண திட்டமிட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
5 பில்லியன் டார்கெட்
டிசிஎஸ் நிறுவனம் இத்துறையில் 5 பில்லியன் டாலர் வரை வருவாய் பெற தேவையான அனைத்துப் பயிற்சி மற்றும் கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
வாடிக்கையாளர்
மேலும் புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும், மேம்பட்ட சேவையை அளிக்கவும் புதிய தொழில்நுட்பத்தில் மென்பொருளை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
இன்போசிஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக டிசிஎஸ் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையிலும் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இதற்காகப் புதிய ஒரு நிறுவனத்தையும் கையகப்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் இந்தியா
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications