சென்னை: 2015-16-ம் ஆண்டின் மத்திய பட்ஜெட்டில், தனிநபர்களுக்கான வரி சலுகைகளைத் தேடிப்பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மாறாக, பெருமளவு வருமானத்தைச் சேவை வரி உயர்வின் விளைவிற்குப் பலனாகச் செலுத்தும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
வரிகளில் சில மாற்றங்கள் இருக்கும் என்று 2015-16-ம் ஆண்டின் பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி குறிப்பிட்டிருந்தார். இதோ அவற்றில் உங்களைப் பாதிக்கும் சில விஷயங்களைப் படியுங்கள்:
சுழற்சி வைப்பு நிதிக்கான TDS
ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஒழுங்குடன் சேமிக்க உங்களுக்கு உதவும் சேமிப்பு முறை தான் சுழற்சி வைப்பு நிதியாகும்.
முன்னதாக, நிலையான வைப்பு நிதிகளின் வட்டி அளவு ரூ.10000-ஐ தாண்டினால் மட்டுமே TDS விதிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது சுழற்சி வைப்பு நிதிகளுக்கும் இந்த விதி பொருந்துகிறது.
அதிலும் நீங்கள் 15G/H படிவங்களைச் சமர்ப்பிக்காவிடில், உடனடியாக TDS பிடித்தம் செய்யப்படும்.
வட்டி வருமானம்
முன்னதாக, ஒரு வங்கி கிளையில் நீங்கள் வைத்திருக்கும் கணக்கின் வட்டி ரூ.10,000-ஐ தாண்டினால் மட்டுமே TDS விதிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது பல்வேறு கிளைகளிலும் உள்ள கணக்குகளுக்குக் கிடைக்கும் வட்டி விகிதங்கள் ஒன்றாகக் கூட்டப்பட்டு இது கணக்கிடப்படுகிறது.
எனினும், ரூ.2,50,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள தனிநபர்கள் வரி செலுத்த தேவையில்லை. இந்த நபர்கள் 15G அல்லது 15H படிவங்களைச் சமர்ப்பித்து இருந்தால், அவர்களுக்கு TDS-ம் பிடிக்கப்படாது.
தொழிலாளர் சேமநல நிதிக்கு TDS
5 ஆண்டுகள் முடிவதற்கு முன்னதாக, தொழிலாளர் சேமநல நிதியிலிருந்து எடுக்கப்படும் எந்தவொரு தொகைக்கும் 10 சதவீதம் TDS விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தொகை ரூ.30,000-க்கும் குறைவாக இருந்தால் TDS விதிக்கப்படுவதில்லை.
மேலும், 5 ஆண்டுகள் பணி நிறைவடைவதற்கு முன்னதாகவே தொழிலாளர் சேமநல நிதியை எடுப்பதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இவ்வாறு பணத்தை எடுக்கும் போது, நிரந்தரக் கணக்கு எண்ணை (PAN) குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். நிரந்தரக் கணக்கு எண் குறிப்பிடப்படாத இடங்களில், அதிகபட்சம் 30 சதவீதம் வரையிலும் TDS விதிக்கப்படும்.
சேவை வரி 14%
ஜுன் 1, 2015 முதல் சேவை வரி உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்த நாளிலிருந்து அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்பதைத் தவிர்க்க முடியாது.