பெங்களூரு: நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ் இன்று தனது 2015-16ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
இன்றைய வர்த்தகம் முழுவதும் சரிவை சந்தித்த டிசிஎஸ் நிறுவனம் 2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 25,700 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது. சந்தை ஆய்வுகளின் படி இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவு 25,760 கோடியாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சந்தை கணிப்புகளை டிசிஎஸ் முடிவுகள் ஈடு செய்யவில்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் இல்லை.
பணியாளர்கள் வெளியேற்றம்
டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாளர்கள் வெளியேற்ற அளவு 15.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது இந்நிறுவன வளர்ச்சிக்கு முக்கியத் தடையாக விளங்குகிறது.
நிறுவன வளர்ச்சி
முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வளர்ச்சி 4.8 சதவீதமாக உள்ளது. ஐடித்துறையின் மொத்த வளர்ச்சி விகிதத்தைப் பார்க்கும் போது டிசிஎஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது.
மொத்த லாபம்
இந்நிலையில் 2015-16ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் அளவு 5,709 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த காலாண்டை ஒப்பிடுகையில் இதன் அளவு 3.3% குறைவு.
ஈவுத்தொகை
இந்நிறுவனப் பங்குதாரர்களுக்கு, டிசிஎஸ் நிர்வாகம் ஈவுத்தொகையாக ஒரு பங்கிற்கு 5.50 ரூபாய் அளித்துள்ளது.
11 புதிய வாடிக்கையாளர்கள்
2015ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 20 மில்லியன் டாலருக்கும் குறைவான மதிப்புள்ள திட்டத்தில் 10 புதிய வாடிக்கையாளர்கள், 50 மில்லியன் டாலர் திட்டத்தில் 1 வாடிக்கையாளரைப் பெற்றுள்ளது.
பணியாளர்கள்
இக்காலத்தில் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 5,279 பணியாளர்களை நிறுவனத்தில் இணைத்துள்ளது.
பங்குச் சந்தை
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் 2.80 சதவீதம் குறைந்து 2,522.50 ரூபாய்க்கு இந்நிறுவனப் பங்குகள் விற்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications