பூரி: மத்திய தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒடிசா மாநிலத்தில் மொபைல் மற்றும் இண்டர்நெட் சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில் 830 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக இத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பூரி நகரில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் வை-பை சோன் சேவையை துவக்கி வைத்த ரவி சங்கர் பிரசாத் ஒடிசாவில் தனது முதலீட்டு திட்டத்தை பற்றி தெரிவித்தார்.
இதில் 400 கோடி ரூபாயை நேஷ்னல் ஆப்டிக் பைபர் நெர்வொர்க் சேவையில் முதலீடு செய்யவும் ரவி சங்கர் பிரசாத் திட்டமிட்டுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான, நாட்டின் வரலாறு சிறப்புமிக்க இடங்களில் வை-பை சோன் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஜெகநாதர் கோவிலில் இச்சேவை துவங்கப்பட்டது.
இத்துவக்க நிகழ்ச்சியில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மற்றும் மாநில அமைச்சர் பிரணாப் பிரகாஷ் தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.