இந்தியாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் உயர்வு!

டெல்லி: இந்தியாவில் 2018ஆம் ஆண்டிற்குள் மில்லியனர்களின் எண்ணிக்கை 4.37 லட்சமாக உயரும், 2023ஆம் ஆண்டில் அதன் அளவு இரட்டிப்பாக அதிகரிக்கும் எனப் பன்னாட்டு நிறுவனம் செய்த ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கிறது.

நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சியில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என இந்த ஆய்வுகள் தெரிவிக்கிறது.

வெல்த் எக்ஸ் நிறுவனம்

வெல்த் எக்ஸ் நிறுவனம்

உலக நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சொத்துக்கள் குறித்த ஆய்வுகளைச் செய்து வரும் வெல்த் எக்ஸ் நிறுவனம் தான் இத்தகைய அய்வை நடத்தியது.

27 சதவீதம்

27 சதவீதம்

கடந்த 1 வருடத்தில் மட்டும் இந்தியாவில் மில்லியன் டாலர் சொத்தகள் உடைய பணக்காரர்கள் எண்ணிக்கை 1,96,000 இல் இருந்து 2,50,000 அளவு உயர்ந்துள்ளது. இது சுமார் 27 சதவீதம் அதிகமாகும்.

இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா

இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா

அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்காவில் பணக்காரர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயரும் எனவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

ஆடம்பர சந்தை

ஆடம்பர சந்தை

பணக்காரர்களின் எண்ணிக்கை உயரும் போது ஆடம்பர பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கும்.

பணக்காரர்கள் எண்ணிக்கை

பணக்காரர்கள் எண்ணிக்கை

இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, கல்வி அறிவு இருப்பது, தொழில்முனைவு அதிகமாக இருப்பது ஆகியவையின் முக்கியக் காரணமாக ஒரு நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை உயரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+