டெல்லி: இந்திய தபால் துறையின் பார்சல் சேவையின் வருவாய் -2% இருந்து 2014-15ஆம் ஆண்டில் 37 சதவீதமாக அதிகரித்துப் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தான்.
ஈகாமர்ஸ் நிறுவனங்கள்
கடந்த நிதியாண்டில் அமேசான், ஸ்னாப்டீல் மற்றும் பே-டிஎம் நிறுவனத்தின் பொருட்களைத் தனது வாடிக்கையாளர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியில் இந்திய தபால் துறை இணைந்தது. இதன் பின் இச்சேவையின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
மேம்பாடு
ஈகாமர்ஸ் துறைச் சேவையை மேம்படுத்த இந்திய தபால் துறையில் மத்திய அரசு பல கோடி ரூபாய் முதலீடு செய்ய மேம்படுத்தி வருகிறது.
வருவாய் அதிகரிப்பு
கடந்த ஒரு வருடத்தில் இந்திய தபால் துறை பல புதிய சேவைகளை அறிவித்தது. குறிப்பாக ஸ்டாப், டெலிவரி போன்ற சேவைகளின் மூலம் அதிகளவிலான வருவாய் கிடைத்துள்ளது.
வங்கி சேவை
ரிசர்வ் வங்கி தபால் துறைக்குப் பேமென்ட் வங்கி சேவை அளிக்க உரிமம் வழங்கும் திட்டத்தில் உள்ள நிலையில் இத்துறையின் 2590 கிளைகளில் வங்கி சேவை அளிக்கத் துவங்கியுள்ளது.
அடுத்தச் சில வருடங்களில் இந்தியா முழுவதும் இச்சேவை விரிவாக்கப்படும்.
ஈகாமர்ஸ் துறை
இத்துறைக்கு இந்திய தபால் துறை மிகப்பெரிய உதவியாக இருக்கும். தற்போதுள்ள நிலையில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் முக்கிய நகரங்களுக்கு மட்டுமே தனது பொருட்களை விநியோகம் செய்து வருகிறது.
தபால் துறையுடன் இணைவதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்குத் தனது பொருட்களைக் கொண்டு சேர்க்க முடியும்.
முதலீடு
மத்திய அரசு இதுவரை தபால் துறை அலுவலகங்களை மேம்படுத்த 5,000 கோடி ரூபாய் வரையிலான முதலீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதேபோல் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய வேன் மற்றும் வாகனங்களைத் தபால் துறை வாங்கியுள்ளது.