பெங்களூரு: இந்தியாவில் மகப்பேறு மற்றும் தந்தைமை (paternity) கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், தனது பெண் ஊழியர்களுக்குக் குழந்தைகளைத் தத்தெடுக்க 50,000 வரை நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இச்செயல் இந்திய கார்பரேட் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. இதைத் துவக்கிய ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஒரு சல்யூட்.
(பிளிப்கார்ட் நிறுவன செய்திகள்)
ப்ளிப்கார்ட்
இந்தத் தத்தெடுப்புக் கொடுப்பனவு (adoption allowance) வருகிற ஜூலை 10ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொகையைக் குழந்தையைத் தத்தெடுக்கும் பணியில் சட்ட ரீதியாகவும், தரக நிறுவன செலவுகள் அல்லது பிற செலவுகளுக்கும் ஊழியர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிய வீடு.. புதிய வாழ்க்கை..
இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் மாத காலத்தில் சுமார் 1,368 குழந்தைகளுக்குப் புதிய வீடு (தந்தை, தாய்) கிடைத்துள்ளதாக மத்திய தத்தெடுத்தல் அமைப்பு (CARA) தெரிவித்துள்ளது.
புதிய திட்டம் வகுத்த பிளிப்கார்ட்
12 மாதத்திற்குக் குறைவான குழந்தையைத் தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு நிலையான மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும்.
1 வருடத்திற்கும் அதிக வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் ஊழியருக்கு சம்பளத்துடன் 3 மாத முழு விடுமுறையும், 4 மாத வளைந்த தன்மை பணி நேரம் வேலை அளிக்கப்படும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஆண் பணியார்களுக்கு
குழந்தையைத் தத்தெடுக்கும் ஆண் பணியாளருக்கு சம்பளத்துடன் 6 மாத விடுமுறை, 4 மாத வளைந்த தன்மை பணி நேரம் வேலை செய்யும் சலுகையும் பிளிப்கார்ட் அளிக்கிறது.
கூடுதல் விடுமுறை
இதற்குப் பின்னரும் ஊழியர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால், சம்பளம் இல்லாமல் 3 மாதம் வரை விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும், உங்களது பணிக்கு நிறுவனம் உத்திரவாதம் அளிக்கிறது.
மருத்துவச் செலவுகள்
மேலும் பணியாளரின் பிரசவ செலவுகளையும் பிளிப்கார்ட் நிறுவன ஏற்க உள்ளது. சுக பிரசவமாக இருந்தால் 65,000 ரூபாய் வரையும், சி-செக்ஷன் ஆக இருந்தால் 80,000 ரூபாய் வரை நிறுவனம் சலுகை அளிக்கிறது.
இந்திய நிறுவனங்கள்
இத்தகைய ஊக்கத்தை இந்திய நிறுவனங்கள் அனைத்தும் அளித்தால் இந்தியாவில் தந்தை தாயற்ற குழந்தைகள் இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications