பெங்களூரு: இந்தியாவில் மகப்பேறு மற்றும் தந்தைமை (paternity) கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனமான ப்ளிப்கார்ட், தனது பெண் ஊழியர்களுக்குக் குழந்தைகளைத் தத்தெடுக்க 50,000 வரை நிதியுதவி அளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இச்செயல் இந்திய கார்பரேட் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. இதைத் துவக்கிய ப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கு ஒரு சல்யூட்.
(பிளிப்கார்ட் நிறுவன செய்திகள்)
ப்ளிப்கார்ட்
இந்தத் தத்தெடுப்புக் கொடுப்பனவு (adoption allowance) வருகிற ஜூலை 10ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்தொகையைக் குழந்தையைத் தத்தெடுக்கும் பணியில் சட்ட ரீதியாகவும், தரக நிறுவன செலவுகள் அல்லது பிற செலவுகளுக்கும் ஊழியர் பயன்படுத்திக் கொள்ளலாம் எனப் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
புதிய வீடு.. புதிய வாழ்க்கை..
இந்தியாவில் கடந்த ஜனவரி - மார்ச் மாத காலத்தில் சுமார் 1,368 குழந்தைகளுக்குப் புதிய வீடு (தந்தை, தாய்) கிடைத்துள்ளதாக மத்திய தத்தெடுத்தல் அமைப்பு (CARA) தெரிவித்துள்ளது.
புதிய திட்டம் வகுத்த பிளிப்கார்ட்
12 மாதத்திற்குக் குறைவான குழந்தையைத் தத்தெடுக்கும் பெண் ஊழியர்களுக்கு நிலையான மகப்பேறு விடுமுறை அளிக்கப்படும்.
1 வருடத்திற்கும் அதிக வயதுடைய குழந்தையைத் தத்தெடுக்கும் ஊழியருக்கு சம்பளத்துடன் 3 மாத முழு விடுமுறையும், 4 மாத வளைந்த தன்மை பணி நேரம் வேலை அளிக்கப்படும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.
ஆண் பணியார்களுக்கு
குழந்தையைத் தத்தெடுக்கும் ஆண் பணியாளருக்கு சம்பளத்துடன் 6 மாத விடுமுறை, 4 மாத வளைந்த தன்மை பணி நேரம் வேலை செய்யும் சலுகையும் பிளிப்கார்ட் அளிக்கிறது.
கூடுதல் விடுமுறை
இதற்குப் பின்னரும் ஊழியர்களுக்கு விடுமுறை தேவைப்பட்டால், சம்பளம் இல்லாமல் 3 மாதம் வரை விடுமுறை பெற்றுக்கொள்ள முடியும், உங்களது பணிக்கு நிறுவனம் உத்திரவாதம் அளிக்கிறது.
மருத்துவச் செலவுகள்
மேலும் பணியாளரின் பிரசவ செலவுகளையும் பிளிப்கார்ட் நிறுவன ஏற்க உள்ளது. சுக பிரசவமாக இருந்தால் 65,000 ரூபாய் வரையும், சி-செக்ஷன் ஆக இருந்தால் 80,000 ரூபாய் வரை நிறுவனம் சலுகை அளிக்கிறது.
இந்திய நிறுவனங்கள்
இத்தகைய ஊக்கத்தை இந்திய நிறுவனங்கள் அனைத்தும் அளித்தால் இந்தியாவில் தந்தை தாயற்ற குழந்தைகள் இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications